மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இடை
சி clean up
வரிசை 4:
|states=இந்தியா,மலேசியா,சிங்கப்பூர்
|region=கேரளம், புதுச்சேரி, மைய்யழி, ஐக்கிய ராஜ்ஜியம்
|speakers=35,757,100<ref>{{cite web|url=http://www.ethnologue.com/show_language.asp?code=mal|title=Malayalam|work=Ethnologue|accessdate=2007-05-28}}</ref>.</br />35,351,000 இந்தியாவில் </br />37,000<ref>{{cite web|url=http://www.ethnologue.com/show_country.asp?name=MY|title=Languages of Malaysia|work=Ethnologue|accessdate=2007-05-28}}</ref> மலேசியாவில் </br />10,000 சிங்கப்பூரில்
|rank=29
|familycolor=திராவிடம்
வரிசை 15:
|iso1=ml|iso2=mal|iso3=mal}}
 
'''மலையாளம்''' [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலுள்ள]] [[கேரளம்|கேரளத்தில்]] பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[இந்தியா|இந்திய]] அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு [[தமிழ்]], [[சமசுகிருதம்]] முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக [[மலையாளிகள்]] என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு [[கேரளர்கள்]] எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.
 
== தோற்றம் ==
வரிசை 37:
ஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன
 
மலையாளம் என்ற சொல் ஒரு காலத்தில் நாட்டின் பெயரை மட்டும் குறித்தது. எனவே மலையாள நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியாகையால் மலையாளம் என்பது மொழியின் பெயராக ஆகியிருக்கலாம். என்றாலும் இம்மொழி மலையாண்ம என்ற பெயராலேயே அறியப்படுவந்தது. நாட்டின் பெயர் மொழியின் பெயர் ஆனவுடன், பழைய மலையாள மொழியின் பெயரை குறிக்க சிலர் மலையாண்ம என்ற சொல்லை பயன்படுத்தினர்.
 
மொழியியல் வல்லுனர்கள் கருத்து பின்வருமாறு. மலையாளம் தமிழிலிருந்தே பிறந்ததாகும். எல்லா மொழிகளையும் போல் தமிழுக்கும் வட்டார வழக்குகள் உள்ளது. இது ஒரு விதமான கொடுந்தமிழிலிருந்து தான் பின்னர் மலைநாட்டின் மொழியான மலையாளம் உருவம் பெற்றது. இவ்விதமான மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்வருபவன காரணமாக திகழ்ந்தன:
வரிசை 45:
* நம்பூதரிகளின் ஆரிய பண்பாடு
 
மலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழகமக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாளநாட்டுக்கமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது.
 
கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது.
வரிசை 51:
== நெடுங்கணக்கு ==
 
மலையாள நெடுங்கணக்கில் வடமொழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களோடு திராவிட ஒலிகளான எ,ஒ,ற,ள்,ழ ஆகியவையும் மலையாள நெடுங்கணக்கில் உள்ளன. மேலும் 'ன'கரம் முற்காலத்தில் இருந்து, ஆனால் 'ந' ,'ன' கரத்துக்கான வேறுபாடுகள் மறைந்ததால், 'ன'கரம் மறைந்து விட்டது.
 
{| border="1" cellpadding="5" cellspacing="0" width="30%"
வரிசை 99:
[[படிமம்:John 3 16 Sanskrit translation grantham script.gif|thumb|float|400px|right|வடமொழி சமஸ்கிருத சுலோகம் கிரந்த எழுத்துக்களில்]]
திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் [[பிராமி]] எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும்.
இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், [[சமஸ்கிருதம்]] கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுமுறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுதப்பட்டது.
 
சமஸ்கிருததில் பிராசரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க [[வட்டெழுத்து]] போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினேயே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை [[துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்]] என்பவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதை மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.
வரிசை 109:
 
* '''அனுனாசிகாதிப்ரசரம்'''(അനുനാസികാതിപ്രസരം)
அதாவது, மெல்லினத்தை ஒட்டி வரும் இன எழுத்துக்கள், மெல்லினமாகவே மாறுதல்.
 
{| border="1" cellpadding="5" cellspacing="0" width="30%"
வரிசை 137:
# மலையளத்திலுள்ள தூது காவியங்கள்(സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள்(ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள்
 
பாட்டிலக்கியத்தில் பழமையானது ''சீராமன்'' எழுதிய ''ராமசரிதம்(രാമചരിതം)'' ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணஸ்ஸராமயணத்தில் காணலாம்.
 
<blockquote>
வரிசை 147:
ராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாள படைப்புகள் சமஸ்கிருத விபக்திபிரயோகங்களும்(വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ் சொற்களும் மற்றும் பழைய மலையாள சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமஸ்கிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் ஸ்ரீகிருஷ்விலாசமும், சங்கராசார்யருடைய ஸ்தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலக்கட்டதில் பிரபலாமக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமஸ்கிருத ஸ்தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் வசுதேவஸ்தவம் போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் இயற்றப்பட்டவையாகும்
 
கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருஷ்ணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிபாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருஷ்ண காதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள், வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்கலூடைய கவிதைகளில் கிருஷ்ணகாதையின் தாக்கத்தை காணலாம்.
 
தனித்த மலையாள மரபு என்ற நிலையில் மலையாள இலக்கியத்தில் தூதுகாவியங்களையும் சம்பூக்களும் இவ்வகையில் சேரும்.
 
=== தற்கால இலக்கியம் ===
 
தற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரிந் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளிலைக்குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கத்தால் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேய காலத்து கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வேத கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது.
 
உரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் ''பாஷாசாகுந்தளம்(ഭാഷാശാകുന്തളം)'' என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திய்லேயே மலையாள இலக்கியம் உரைநடையைநோக்கி வழிமாறச்செயதது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்ம்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.
 
ஹெர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் ''பாஷாசரித்ரம்(ഭാഷാചരിത്രം)'' பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்ம்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும்(റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான(നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டது.
 
== வட்டார வழக்குகள் ==
கேரள பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப்பிரிவு நடத்திய ஆய்வில், 12 வட்டார வழக்குகள் மலையாளத்துக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொக்கன்(திருவிதாங்கூர்), மத்திய கேரளம்(கோட்டயம்), திரிச்சூர், மலபார் ஆகிய நான்கு வழக்குகள் முதன்மையாக வழக்குகளாகும். இவற்றுள் கோட்டயம் வழக்கின் தாக்கம் எழுத்து மொழியில் அதிகமாக உள்ளது. இதற்கு அச்சுப்பதிப்பு கோட்டயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முதலில் தோன்றியதே காரணமாகும்.
 
== பிற மொழிகள் ஏற்பு ==
மலையாள மொழி மிகவும் அதிக அளவில் ஏற்றுக்கொண்டது தமிழ் மற்றும் வடமொழியே ஆகும். இதற்கு திராவிட பின்புலமும், பிராமண தாக்கமுமே காரணம் ஆகும். உலகின் பிற மொழிகளின் கூறுகளையும் மலையாள மொழியில் காணலாம். ஆதி காலம் தொட்டே, கேரளத்தின் வணிக உறவினால் இது நிகழ்ந்துள்ளது. இந்தி,உருது, ஐரோப்பிய மொழிகள், சீனம் ஆகியவற்றின் பல கூறுகளையும் மலையாளம் நல்கியுள்ளது.
 
== மலையாள யூனிகோடு ==
வரிசை 181:
== துணுக்குச் செய்திகள் ==
 
ஆங்கிலத்தில் மலையாளம் என்பது இருவழி ஒக்கும் சொல்(Palindrome) ஆகும். Malayalam என்பதை முன்னிருந்து பின்னாக படித்தாலும், பின்னிருந்து முன்னாக படித்தாக ஒரே சொல் வருவதை கவனிக்க.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது