எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி *திருத்தம்* |
||
வரிசை 1:
'''எஸ். வி. சகஸ்ரநாமம்''' (நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் [[சங்கீத நாடக அகாதமி விருது]] பெற்றவர். 200க்கும் மேற்பட்ட [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவற்றில் [[மேனகா]], [[பராசக்தி]], [[குலதெய்வம்]], [[ஆனந்த ஜோதி]], [[நல்ல தம்பி]], [[போலீஸ்காரன் மகள்]], [[படித்தால் மட்டும் போதுமா]], [[சிங்காரி]], [[மர்மயோகி]], [[பூம்பாவை]], [[மணமகள்]], [[கண்கள்]], [[உரிமைக்குரல்]], [[நாலுவேலி நிலம்]], [[அல்லி பெற்ற பிள்ளை]] என்பன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
==இளமைக் காலம்==
[[கோவை]]யை அடுத்த [[சிங்காநல்லூர்|சிங்காநல்லூரில்]] பிறந்தவர்<ref>{{cite web | url=http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/Mar13_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_SV_Sahasranamam_page1.html | title=Potpourri of titbits about Tamil cinema - S.V. Sahasranamam | publisher=கல்யாணமாலை இதழ் | date=15 சனவரி 2013 | accessdate=6 திசம்பர் 2013 | author=மேஜர்தாசன்}}</ref>. சிறு வயதிலேயே தாயை இழந்த சகஸ்ரநாமம் தமது வறிய, பெரிய குடும்பத்தின் வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய சென்றபோது தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்து, குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார். வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு, மதுரை பாலஷண்முகானந்த சபா மேலாளர் காமேஸ்வர அய்யரிடம், "சம்மதம்" என்று கடிதத்தைக் கொடுத்து நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். இருப்பினும் காமேசுவர அய்யர் இதைக் கண்டுபிடித்து அவரது தந்தையின் உடன்பாட்டுடன் அவரை நாடக கம்பனியில் சேர்த்துக் கொண்டார்.
==சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்கள்==
|