தினேஷ்குமார் என்னும் இளைஞன் கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகப்வல்லுநராகப் பணிபுரிகிறான். அவன் மண்டைக்குள் சில குரல்கள் கேட்கின்றன. அவை அவனைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அந்த குரல்கள் கேட்பதன் காரணம் என்ன, மூளையில் பாதிப்பா, மனநல பாதிப்பா, பேயா, முற்பிறவி நினைவா என எல்லாரும் அவனைக் குழப்புகின்றனர். கொலையாளி என்று குற்றம் சாட்டப்படும் தினேஷ்குமாரை விடுவிக்க வருகிறார்கள் வக்கீல்கள் கணேஷ் வசந்த். இந்த வினோத குரல்களின் காரணம் என்ன என்பதைப் பற்றிக் கண்டறிவதாகச் செல்லும் கதை.