குருதிச்சோகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 18:
இரத்தத்தில் காணப்படுகின்ற அனைத்து ஒழுங்கின்மையிலும், இரத்தசோகை மிகவும் வழக்கமானதாகும். இரத்தசோகையில் பல வகைகள், பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றது. இரத்தசோகையை பலவகையிலும் வகைப்படுத்தலாம். குருதிச் சிவப்பணுக்களின் உருவத்தில் காணப்படுகின்ற மாற்றத்தின் அடிப்படை, இரத்தசோகை ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படை, நோயின் தன்மை போன்ற பல்வேறு அடிப்படையில் இரத்தச்சோகை வகைப்படுத்தலாம். அடிப்படையில் இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்களை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்க முடியும். அவையாவன: (1) [[குருதிப்பெருக்கு|குருதிப்பெருக்கினால்]] ஏற்படும் அதிக்கப்படியான இரத்த இழப்பு (2) அதிக்கப்படியான குருதிச் சிவப்பணுக்களின் அழிவு (Hemolysis) (3) குறைவான சிவப்பு அணுக்களின் உற்பத்தி.
==குறிகளும், அறிகுறிகளும்==
[[File:Symptoms of anemia ta.png|thumb|
இரத்தசோகை உள்ளவர்களிடம், இரத்தசோகையினாலோ அல்லது இரத்தசோகை ஏற்பட காரணமான நோயினாலோ பல நோய்க்குறி (signs) (ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி) மற்றும் பல உணர்குறி (Symptoms) (நோயினை உணர்த்தும் அறிகுறிகள்) இருக்கலாம். பலரில் எந்தவித நோய்க்குறியும் இல்லாமல் இருப்பதாலோ அல்லது மிகவும் குறைந்த அள்வில் நோய்க்குறி இருப்பதாலோ நோய் கண்டு பிடிக்கப்படாமலே போகலாம். தளர்ச்சி, பலவீனம், உடல்சோர்வு, கவனக்குறைவு போன்ற தெளிவற்ற அல்லது வரையறுக்கப்படாத பொது குறிகளையே பலரும் கொண்டிருப்பர். குறைந்தளவு ஆக்சிசனே இழையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதனால், அதனை ஈடுசெய்வதற்காக, இதயம் விரைவாக இயங்கி அதிகளவு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த விளையும். அதனால், [[இதயத் துடிப்பு]] அதிகரிக்கும். மனித உடலில் 5 முதல் 6 லிட்டர் வரையிலான இரத்தம் உள்ளது. இதில் 100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 20 மில்லி லிட்டர் பிராணவாயுவை நுரையீரலில் இருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கிறது. [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களின்]] தேவைகளைப் பூர்த்திசெய்து மீண்டும் இதயத்தை வந்தடையும் பொழுது 100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 15 மில்லி லிட்டர் பிராணவாயுவைக் கொண்டதாக இருக்கும். அதாவது 100 மில்லி லிட்டர் இரத்தம் 5 மில்லி லிட்டர் பிராணவாயுவை உடல் உறுப்புகளுக்கு அளிக்கிறது. இந்த வகையில் கணக்கிடும் பொழுது முழு உடலும் ஒரு நிமிடத்திற்கு 250 மில்லி லிட்டர் பிராணவாயுவைப் பயன்படுத்துகின்றன. இரத்தசோகை உள்ள நபர்களுக்கு பிராணவாயு பரிமாற்றத் தன்மையில் குறைபாடு ஏற்படுவதால், அவர்களின் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, இதயம் ஒரு முறை துடிக்கும் பொழுது சுமாராக 70 மில்லி லிட்டர் இரத்தத்தை தனது இடது கீழறையில் (Left Ventricle) இருந்து வெளியேற்றுகிறது. ஒரு நிமிடத்தில் சுமார் 70 முறை இதயம் துடிப்பதால் 70 x 70 = 4900, சுமாராக 5000 மில்லி லிட்டர் இரத்தம் இதயத்தை விட்டு பிராணவாயு கலக்கப்பட்ட சுத்தமான இரத்தமாக வெளியேற்றப்படுகிறது. 100 மில்லி லிட்டர் இரத்தம், அது எடுத்துச்செல்லவேண்டிய 20 மில்லி லிட்டர் பிராணவாயுவை இரத்தசோகை காரணமாக எடுத்துச்செல்லவில்லை என்றால், இதயத்தின் அருகில் உள்ள சில சிறப்பு அம்சங்களை தனது சுவற்றினுள் கொண்ட இரத்தநாளங்கள் அதனை உணர்ந்து உடனடியாக மூளைக்கு தெரிவிக்கிறது. அதன் விளைவாக இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பின் அழுத்தமும் அதிகரிக்கும். இதன் விளைவாக மார்புப் படபடப்பு (PALPITATION) இதயத்தில் ஏற்படவும் வாய்ப்புண்டு.
|