படைத்துறைச் சொற் பயன்பாட்டில் '''சரணடைதல்''' என்பது, பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு, போர் வீரர்[[போர்வீரர்]], அரண்கள்[[அரண்]]கள், கப்பல்கள்[[கப்பல்]]கள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]] என்பவற்றை இன்னொரு படையினரிடம் துறந்து விடுவதைக் குறிக்கும். சரணடைதல் [[போர்]] எதுவும் இடம்பெறாமலேயே அமைதியாக நடைபெறலாம். அல்லது, போரில் ஒரு பகுதி தோல்வி அடைவதன் மூலம் ஏற்படலாம். இறைமையுள்ள[[இறைமை]] உள்ள நாடு ஒன்று போர் ஒன்றில் தோல்வியுற்ற பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் அல்லது சரணடைதல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இடுவதன் மூலம் சரணடைவது வழக்கம். [[போர்க்களம்|போர்க்களத்தில்]] தனிப்பட்ட வீரர்கள் அல்லது படைத் தலைமையின் கட்டளைப்படி மொத்தமாகச் சரணடையும் போது அவர்கள் [[போர்க் கைதிகள்கைதி]]கள் ஆகிறார்கள்.