சங்கரலிங்கம் ஜெகந்நாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:காந்தியவாதிகள் using HotCat |
கே.ஜெகந்நாதன் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர், மற்றும் பூதான இயக்க முன்னோடி |
||
வரிசை 1:
'''கே.ஜெகந்நாதன்''' (பிறப்பு 1910)தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர், மற்றும் பூதான இயக்க முன்னோடி
===வாழ்க்கை===
பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையிலுள்ள செங்கற்பட்டை சிற்றூர் இவரது சொந்த ஊர். பள்ளிப்படிப்பை இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் முடித்து, கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு காந்தியடிகளின் ஆசிரமத்தில் சேரவிரும்பினார். அனுமதி மறுக்கப்படவே, திருப்பத்தூரிலுள்ள ஒரு கிருத்தவ ஆசிரமத்துக்குச் சென்று மக்களுக்கு சேவை செய்ய செய்யத் தொடங்கினார்.
பெங்களூரில் உள்ள சேரிப் பகுதிகளுக்குச் சென்று சேவை செய்தார். இச் சேரியில் 120 மாணவர்களை த் தங்கச் செய்து சேவை செய்யச் செய்தார்.
===போராட்டங்கள்===
'வெள்ளயனே வெளியேறு' இயக்கத்தின்போது தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக 15 மாதச் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளியே வந்தவுடன் அடுத்த போராட்டத்தில் குதித்தார். 1944இல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீரி 500 பேருடன் சென்று மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார்.இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா விடுதலை அடைந்தபோது, அவர் மகிழ்ச்சியடையவில்லை. நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் நிலம் கிடைக்கும்போதுதான் உண்மையான விடுதலை கிடைத்ததாக பொருள் என கருதினார். எனவே நிலப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் சிலர் விரட்டியடித்தனர். இதையறிந்த ஜெகந்நாதன் அங்கு சென்று போராடி நிலத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுத்தார். இதுவே அவரது முதல் நில மீட்பு போராட்டம்.
1952ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று பூதான இயக்கத்தை தொடங்கினார் அறப்போராட்டங்கள் மூலம் நிலங்களை தானம் பெற்று அவற்றை ஏழை விவசாய மகளிருக்கு அளிதாதார். அவ் வகையில் கீழ் தஞ்சைப் பகுதியில் 10ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக பெற்று 10 ஆயிரம் ஏழை பெண்களுக்கு அளித்தார்.
நாகப்பட்டணம் கடற்கரைப் பகுதியில் உருவெடுத்த இறால் பண்ணைகளை எதிர்த்து அறப்போராட்டங்களை நடத்தி ஓரளவிற்கு வெற்றிபெற்றார்.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்9</ref>
==குறிப்புகள்==
<references/>
|