'''நுளம்பர்''' என்னும் பரபினர்மரபினர் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கும் 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் [[தென்னிந்தியா]]வில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த [[குறுநில மன்னர்]]கள் ஆவர். தொடக்கத்தில் நுளம்பபாடி இன்றைய [[ஆந்திரா]], [[கர்நாடகா]] ஆகிய மாநிலங்களுக்குள் அடங்கியிருந்தது பிற்காலத்தில் இது தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவடைந்தது. தொடக்ககால நுளம்பபாடி, நுளம்பபாடி 1000 என அழைக்கப்பட்டது. விரிவடைந்த பின்னர் இது நுளம்பபாடி 32000 எனப்பட்டது. விரிவடைந்த நுளம்பபாடியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனத்பூர் பகுதி, கர்நாடக மாநிலத்தில் அடங்கும் [[சித்திரதுர்க்கா]], [[தும்கூர்]], [[பெல்லாரி]], [[பெங்களூர்]], [[கோலார்]] ஆகிய பகுதிகளும், தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் அடங்கும் [[தர்மபுரி]],[[கிருட்டிணகிரி]], [[வட ஆற்காடு]] மாவட்டப் பகுதிகளும் அடங்கியிருந்தன.