'''மூன்றாம் கோவிந்தன்''' (793-814 ), என்பவன் ஒரு புகழ்பெற்ற [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூடப்]] பேரரசனாவான். இவனது தந்தை தருவதுருவன் தரவர்சன் ஆவான். இவனது படைகள் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே கன்னோசிவரையிலும் கிழக்கே [[வாரணாசி|வாரனாசி]] முதல் மேற்கில் பரூச் (Bharuch) வரை வெற்றிகளை குவித்தது இவனது பட்டப்பெயர்கள் பிரபுதவர்சன், ஜகதுங்கன், அனுபமா , கீர்தி நாராயணன் , பிரீத்தி வல்லபன், சிறீவல்லபன் , விமலாதித்தன் , அதிசயதவளா ,திரிபுவனதவளா. ஆகும் இத்தகவல் கி.பி.804 காலகட்டத்தைச்சேர்ந்த சேமேசுவர கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது இக்கல்வெட்டை வெட்டுவித்த கவுந்தபீ இவனது பட்டத்தரசி என்று அறியப்படுகிறது.