ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''தமிழ் ஐக்கூ''' அல்லது '''தமிழ் ஹைக்கூ''' எனப்படுவது [[தமிழ் மொழி]]யில் எழுதப்படும் [[ஹைக்கூ]] [[கவிதை]]களைக் குறிக்கும். [[மரபுக் கவிதை]]களைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக [[இணையம்|இணையத்திலும்]] வார [[இதழ்]]களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
'''ஐக்கூ''' அல்லது '''கைக்கூ''' அல்லது '''ஹைக்கூ''' ''(Haiku), {{Audio|Haiku.ogg|ஒலிப்பு}}'' மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 [[அசை (யாப்பிலக்கணம்)|அசைகளைக்]] கொண்டு அமைக்கப்பெறும் [[இயைபு (நூல்வனப்பு)|இயைபற்ற]] [[ஜப்பான்|ஜப்பானியக்]] [[கவிதை]] வடிவம். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் ''பாசோ'' இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.
 
உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் [[சப்பான்|சப்பானில்]] ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் [[எடோ காலம்|எடோ]] காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.
 
இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன{{cn}}. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது.
 
'''தடித்த எழுத்துக்கள்'''==2012 இல் வந்த ஹைக்கூ நூல்கள்==
== ஐக்கூ பெயர்க் காரணம் ==
* தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ, தொகுப்பு நூல், கன்னிக்கோவில் ராஜா
ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் ''அணுத்தூசி'' போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.
* தமிழ் ஹைக்கூ ஆயிரம், தொகுப்பு நூல், இரா. மோகன்
* சுட்டிபூங்கா, பே . ராஜேந்திரன்
* குறையொன்றும் இல்லை, கம்பம் புதியவன்
* ஹைக்கூ வானம், வீ. தங்கராஜ்
* யாழினிது (குழன்தைகள் ஹைக்கூ), கன்னிக்கோவில் ராஜா
* ஒரு ட சொல்லுகள் (சென்ரியு), கவின்
 
[[பகுப்பு:சப்பானியதமிழ் இலக்கியம்]]
தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, [[குறும்பா]], சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.
 
== ஐக்கூ கவிதையின் அளவு வரையறை ==
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை ''மொரே'' (morae) என்கின்றனர்.
ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஜப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!)
 
தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை [[ஓவியக் கவிஞர்]] வெளியிட்டார்.
 
== ஐக்கூ கவிதையின் வளர்ச்சி ==
புத்த மதத்தின் கிளைப் பிரிவான சென் (Zen) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஐக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியக் கவிஞர்கள் மோரிடேகே (1473-1549), மற்றும் சோகன் (1465-1553) ஆகியோர் ஐக்கூ கவிதையின் முன்னோடிகள் என்றழைக்கப் படுகிறார்கள். ஐக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465-1553), யோசா பூசன் (1716-1784), இசுசா (1763-1827), சிகி (1867-1902) ஆகிய ஐக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.
 
== தமிழ் ஐக்கூ எடுத்துக்காட்டுகள் ==
{{main|தமிழ் ஹைக்கூ கவிதைகள்}}
<poem>
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
:::- [[நா. முத்துக்குமார்]]
</poem>
 
<poem>
வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்க் குழந்தையின்
கிறுக்கல்கள்
:::- [[சீனு. தமிழ்மணி]]
</poem>
 
<poem>
சோளக்கொல்லை பொம்மைக்கும்
உடையுண்டு
எங்களுக்கு!
:::- [[சீனு. தமிழ்மணி]]
</poem>
 
வாடும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
- கவியருவி ம.ரமேஷ்
 
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவ நதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் சொத்து
- ந.க. துறைவன்
வசந்தகாலம்
இருகிமுனகும்
மரக்கதவு
-கவின்முகில்
 
ஆடிக்கொண்டேயிருக்கிறான்
வறுமையின் பிடியில்
தெருக்கூத்தாடி!
-ப.கண்ணன்சேகர்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://omnibus.sasariri.com/2012/10/blog-post_9.html " சுஜாதா வார்த்தைகளில் இதுதான் ஹைக்கூ "]
* [http://www.maraththadi.com/article.asp?id=2219 மரத்தடி.காம்-இல் ஹைக்கூ பற்றிய கட்டுரை]
* [http://ricardo-haiku.blogspot.com/ Ricardo Haiku]
* [http://ta.wikipedia.org/wiki/தமிழ்_ஹைக்கூ_கவிதைகள் "தமிழ் ஹைக்கூ கவிதைகள்"]
 
[[பகுப்பு:இலக்கிய வகைகள்]]
[[பகுப்பு:கவிதை]]
[[பகுப்பு:சப்பானிய இலக்கியம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது