இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 11:
| Abode = [[அயோத்தி]]}}
'''இராமர்''' இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[திருமால்|திருமாலின்]] ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குலத்தின் கோசல நாட்டின் தலைநகர் [[அயோத்தி|அயோத்தியின்]] அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[பரதன்]], [[சத்ருக்கனன்]] ஆவர். பொதுவாக
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண இதிகாசத்தின் முக்கியக்
{{Hinduism small}}
வரிசை 21:
== கம்ப இராமாயணம் ==
[[கம்பர்|கம்பரால்]] தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் [[கம்ப இராமாயணம்]] ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது.
== இராமாயண இதிகாசம் ==
வரிசை 34:
=== மிதிலை நகர் செல்லுதலும் திருமணமும் ===
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை]] சென்றார். [[சனகன்]] என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் [[சீதை|சீதையைத்]] திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.
மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. [[கைகேயி|கைகேயியின்]]
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
=== சூர்ப்பனகையின் மூக்கறுத்தல் ===
இலங்கையை ஆண்டு வந்த [[இராவணன்]] என்னும் [[அரக்கன்]] தங்கை [[சூர்ப்பனகை]] ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்து விட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
=== மாயமான் ===
இராவணன், [[மாரீசன்]] என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய [[சடாயு]] தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான். திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.
=== இராமருக்கும் சுக்ரீவனுக்குமான சந்திப்பு ===
[[சுக்ரீவன்]] குரங்குகளுக்கு அரசனாகிய [[வாலி|வாலியின்]] தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர். இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிடம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
=== விபீஷணன் இராமரிடம் சரணாகதி செய்தல் ===
இராவணனுக்குக் [[கும்பகருணன்]], [[வீடணன்]] என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். [[இராவணன்]] மறுத்து விட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டுவிட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
=== போர் ===
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் [[இந்திரஜித்|இந்திரசித்தும்]] மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர். கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர், இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக் கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
|