ஒகேனக்கல் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
==பெயர் வரலாறு==
===தலைநீர்===
'''தலைநீர்''' என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு '''தலைநீர் நாடு''' எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.<ref>உண் துறை <br /> மலை அலர் அணியும் தலை நீர் நாடன் (புறநானூறு 390)</ref>
 
===உகுநீர்க்கல்===
ஓகனேக்கலின் பழைய பெயர் '''உகுநீர்க்கல்''' என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களாள் நடத்தப்பட்ட '''சேமன் சண்டை''' என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, ''நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன்'' எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கிய பதிப்பகம் வெளியிட்ட '''குளிர் காவிரி''' என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு '''உகுநீர்க்கல் உயிர்காவிரி எனதரப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஒகேனக்கல்_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது