கா. அப்பாத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, கா. அப்பாத்துரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் தமிழகத்தில் தோன்றிய தலைசிறந்த மொழியியல் வல்லுநர்ககளுள் ஒருவராவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
 
அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார்.அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் "குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு" மற்றும் "தென்னாட்டுப் போர்க்களங்கள்" ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. அவரது ஆய்வுகள் உணர்வுகளைவிட உண்மைகளை முன்னிலைப்படுத்தியனவாகத் திகழ்கின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை ஐயமற அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார். தமிழர்களின் அறிவியற் சிந்தனை வளர்ச்சியின் வரலாற்றில் அப்பாத்துரையாரின் பங்கு மறுக்க முடியாதது.
அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கா._அப்பாத்துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது