நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''நாச்சியார் திருமொழி''' என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய [[ஆண்...
 
No edit summary
வரிசை 1:
'''நாச்சியார் திருமொழி''' என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய [[ஆண்டாள்|ஆண்டாளால்]] பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன [[நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்]] ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், [[கண்ணன்|கண்ணனைத்]] தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் [[காதல்]] சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
 
இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.
# முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை [[அறுசீர் ஆசிரிய விருத்தம்|அறுசீர் ஆசிரிய விருத்தப்]] பாடல்களாக அமைந்துள்ளன.
# இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் [[கலிவிருத்தம்|கலிவிருத்தங்களாக] அமைந்தவை.
# கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
# நான்காம் பத்துப் பாடல்கள் [[கூடல் குறிப்பு]]ப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
# குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை [[எழுசீர் ஆசிரிய விருத்தம்|எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக]] அமைந்துள்ளன.
# மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள் ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.
# ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.
# மேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து [[தரவுக் கொச்சகக் கலிப்ப்பா]] எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.
# ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்லன. இவை [[கலிநிலைத்துறை]] எனும் பாவகையில் உள்ளன.
# மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.
# திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.
# பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
# அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.
# பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நாச்சியார்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது