சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[ஆனைக்கோட்டை]], [[இளவாலை]], [[மானிப்பாய்]], [[மாரீசன்கூடல்]], [[மாசியப்பிட்டி]], [[மாதகல்]], [[முள்ளானை]], [[நவாலி]], [[பண்டத்தரிப்பு]], [[பெரியவிளான்]], [[பிரான்பத்தை]], [[சண்டிலிப்பாய்]], [[சாவற்காடு]], [[சில்லாலை]], [[சுதுமலை]], [[உயரப்புலம்]], [[வடலியடைப்பு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்குத் தெற்காகக் குடாநாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகளைத் தொட்டு நிற்கின்ற இப்பிரிவின் வடக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கு எல்லையில் [[யாழ்ப்பாண நீரேரி]]யும் உள்ளன. கிழக்கில் [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழை]], [[உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு|உடுவில்]], [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு|நல்லூர்]] ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், மேற்கில் [[சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் சண்டிலிப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.
 
இப் பிரிவின் பரப்பளவு 45 [[சதுர கிலோமீட்டர்]] ஆகும்.