'''அவதாரம்''' என்பது [[தர்மஇந்து கோட்பாடுதொன்மவியல்|தர்மக் கோட்பாட்டு]] சமயங்களான [[இந்து சமயம்|இந்துசமயத்திலும்]] [[அய்யாவழி|அய்யாவழியிலும்]] குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக [[திருமால்|திருமாலே]] அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் [[கர்மா|கர்ம வினை]] காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.