'''குடுமி''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.[[ மூத்த குடியினன்]]குடும்பன் என்பதனால் '''முதுகுடுமி''' என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் '''பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.'''வழுதி''' என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''நெடியோன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி [[சின்னமனூர் செப்பேடு]] "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
:குடுமி என்பது [[குடுமியான்மலை]]. இவ்வூரில் இவன் யூபம் நட்டு வேள்வி செய்தான். எனக் கொள்வது வரலாற்று நெறி.