மனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
மனோ [[தெலுங்கு]] [[இசுலாம்|இசுலாமியக்]] குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று [[இளையராஜா]] மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.<ref name="sudha_umashanker_mano">Sudha Umashanker. [http://www.tfmpage.com/my/singer/mano.html மனோ பற்றிய ஓர் கட்டுரை].</ref>
 
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்<ref name="sudha_umashanker_mano"/>. 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது<ref name="sudha_umashanker_mano"/>. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம் ஆண்டு [[இளையராஜா]] [[பூவிழி வாசலிலே]] என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து [[எங்க ஊர் பாட்டுக்காரன்]] படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும் [[வேலைக்காரன்]] படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார். [[சிங்காரவேலன்சிங்கார வேலன் (திரைப்படம்)|சிங்கார வேலன்]] படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.
 
[[காதலன்]] படத்தில் "முக்காலா முக்காபலா", [[முத்து]] படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் [[உள்ளத்தை அள்ளித் தாஅள்ளித்தா]] படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.
 
==நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது