விசயநகரத்தைச் சேர்ந்தவரும் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியருமான சாயனர் என்பவர் இந்நூல் முழுவதும் மகிதாச ஐத்திரேராஐத்திரேயா என்பவரால் எழுதப்பட்டது எனக் குறித்துள்ளார்.<ref name="ABK_1998">{{cite book |author=Arthur Berriedale Keith |title=Rigveda Brahmanas: The Aitareya and Kausitaki Brahmanas of the Rigveda |url=https://books.google.com/books?id=UDawvHc4AxgC&pg=PA28 |year=1920 |publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-1359-5 |pages=28–29}}</ref> சாயனர் தான் எழுதிய நூலின் அறிமுகத்தில் "ஐத்திரேயா" என்பது தாய்வழிப் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இவர் எழுதியபடி, மகிதாசரின் தாயார் பெயர் "ஐத்தரா". சமசுக்கிருத மொழியில் "ஐத்தர" என்னும் சொல்லுக்கு "மற்ற" அல்லது "விலக்கப்பட்ட" என்னும் பொருள் உண்டு. ஐத்தரா முனிவர் ஒருவரின் பல மனைவியர்களுள் ஒருத்தி. முனிவர் மகிதாசரைவிட மற்ற மனைவியர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளிடமே கூடிய விருப்பம் கொண்டிருந்தார். ஒரு முறை முனிவர் தன்னுடைய மற்ற எல்லா மகன்களையும் தனது மடியில் இருத்திக்கொண்டு மகிதாசரைப் புறக்கணித்துவிட்டார். இதயிட்டு மகிதாசரின் கண்ணில் கண்ணீர் வருவதைக் கண்ட இத்தாரா, தனது குலதெய்வமான பூமித் தாயை வணங்கி முறையிட்டாள். பூமித்தாய் அவர்கள் முன் தோன்றி ஐத்தரேய பிராமணத்தில் அடங்கியுள்ள அறிவை மகிதாசருக்கு வழங்கினாள்.