'''யாழ் நூல்''' பழந்தமிழரின் இசை நுட்பங்களைநுட்பங்கள், [[யாழ்]] ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய [[வில் யாழ்]], [[பேரி யாழ்]], [[மகர யாழ்]], [[செங்கோட்டி யாழ்]] (சீறி யாழ்). [[சகோட யாழ்]] என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் [[சுவாமி விபுலானந்தர்]] ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513663.htm | title=விபுலானந்த அடிகளார் | accessdate=31 திசம்பர் 2016}}</ref> தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலின் அரங்கேற்றம், [[கரந்தைத் தமிழ்க்கல்லூரி|கரந்தை தமிழ்ச்சங்க]] ஆதரவில் [[திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் கோயில்|திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில்]] 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் நடந்தேறியது.<ref>{{cite web|url=http://dinaithal.com/politics/struggles/10227-vilvavanecuvarar-temple.html|title=வில்வவனேசுவரர் கோவில்|publisher=}}</ref> இதன் பதிப்பு ஒன்றைக் கரந்தை தமிழ்ச்சங்கம் 1974 இல் வெளியிட்டது.