கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல் |
|||
வரிசை 49:
1925 ஆம் ஆண்டு வே.அருணாசலம் என்பவர் திருநாவுக்கரசு நாயனார் மடாலயம் ஒன்றை நிறுவினார்.இன்று இப்பாடசாலையின் நினைவுச்சின்னங்களில் ஒன்றான மடாலயமாக விளங்கிய பழைய மண்டபம் எனப்படும் கட்டிடம் 1924 ல் கட்டப்பட்டது.<ref> 2003 ஆண்டு வெளியிடப்பட்ட பவள விழா மலர்ப் புத்தகம் </ref>
இம்மடாலயத்தில் பஐனைகள் அன்னதானம் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வரலாயின.ஆதரவற்றோர் தங்குமிடமாகவும் இருந்தது.
வரி 59 ⟶ 58:
01.08.1971 ஆம் ஆண்டு கொடிகாமம் வாசியான திரு.பொன்.கந்தையனார் அவர்கள் அதிபராகக் கடமை ஏற்றார். இவர் காலத்தில் இவருக்கு உறுதுணையாக துணையதிபராக திரு.வ.கனகலிங்கம் அவர்களும் முனைப்பான ஆசிரியராக திரு.க.இராசதுரையும் கடமையாற்றினார்கள். திரு.பொன்.கந்தையனாரது சேவைக்காலம் பாடசாலை வரலாற்றில் முக்கிய காலப்பகுதி ஆகும்.நல்லன பல புரிந்து பாடசாலையின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் வழி பல வகுத்து பாடசாலை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றவர் திரு.பொன்.கந்தையனார் அவர்கள்.இக்காலத்தில் பாடசாலையின் மாணவர் தொகையை அதிகரித்து பாடசாலையை உயர்த்தும் பொருட்டு வீடு வீடாகப் பிரச்சாரம் செய்தவர் திரு.க.இராசதுரை ஆசிரியர்.இதன் பொருட்டு '''பிள்ளைப் பிடி வாத்தியார்''' எனும் பட்டப் பெயரையும் பெற்றுக் கொண்டார்.
பெற்றோர்,இளைஞர்கள்,நலன்விரும்பிகள் எல்லோரது ஒத்துழைப்போடும் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டதும் அதிபர் திரு.பொன்.கந்தையனார் அவர்கள் காலத்தில் ஆகும்.1974 இல் க.பொ.த சாதாரணதர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு கல்லூரி தரமுயர்த்தப்பட்டது.120'*20'அளவுடைய கட்டிடமொன்றுக்குத் தளமிடப்பட்டதும் இவர் காலத்தில் ஆகும்.திரு.கந்தையனார் பணிபுரிந்த காலத்தில் இருந்து பல வழிகளிலும் இப்பாடசாலை 300 மாணவருக்கு மேல் உள்ளதாக தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு உயர்ந்து விட்டது.இக் காலத்தில் திருநாவுக்கரசு நாயனார் மடாலய சபையையும்,பாடசாலையின் உயர்ச்சிக்காக இணைத்து வைத்துக் கொண்ட பெருமை இவருக்குரியது.
வரி 73 ⟶ 71:
1987.07.01 இல் மட்டுவில் வாசியான திரு.ச.சின்னத்னம்பி அவர்கள் கொத்தணி அதிபராக கடமை ஏற்றார்.கொத்தணி மூலாதாரப் பாடசாலை என்ற வகையில் திரு.ச.சின்னத்தம்பி அவர்களின் காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள் எண்ணற்றவையாயின.இந்திய அமைதிப்படை முகாமிட்டு இருந்தமையால் கட்டடத்தளபாடங்கள் சேதமாக்கப்பட்டன.பாடசாலையை புனரமைக்கும் பணியிலும்,புத்துயிர் அளிக்கும் பணியிலும் ஈடுபட்ட பெருமகன் இவராவார்.சகல மாணவருக்கும் தளபாட வசதி பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.90’*25’ மேல் மாடிக்கட்டடம், 40’*20’ விஞ்ஞான அய்வு கூடம் என்பன இவர் காலத்தில் தளமிடப்பட்டன.
அதிபர்.திரு.க.பேரம்பலம் அவர்கள் காலத்தில் ஒரு முன்னோடிப் பாடசாலையாகத் திகழத் தொடங்கிய இக்கல்லூரி திரு.ச.சின்னத்தம்பி காலத்திலும் மேலும் பல்வேறு சிறப்புக்களுடன் வீறு நடை போடத்தொடங்கியது.திரு.ச.சின்னத்தம்பிக்கு துணையதிபராக முற்பகுதியில் திரு.க.வல்லிபுரம்(1980-1988)அவர்களும்,பிற்பகுதியில் இக்கல்லூரிக்கு அதிபராக விளங்கிய திரு.தம்பு.கந்தையா(1988-1992)அவர்களும் உறுதுணையாய் இருந்தனர்.பாடசாலைக்கு மேற்கில் உள்ள காணியைப் பெற வேண்டும் என்று இவர் காலத்தில் திட்டங்கள் பல தீட்டப்பட்டு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திரு.ச.சின்னத்தம்பி அவர்கள் காலத்தில் 07.01.1991 இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபராக கடமையாற்றிய இளைப்பாறிய திரு.இ.கைலைநாதன், கச்சாய் அரசினர் வித்தியாலயத்தில் அசிரியராக கடமையாற்றி அதிபராக பதவி உயர்வு பெற்ற திரு.ஐ.சின்னையா ஆகியோர் துணை அதிபர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
வரி 86 ⟶ 82:
திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின் முன்னைய அதிபர்கள் விட்டுச் சென்ற பணிகளையும் அவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியையும் செய்ய வேண்டிய நிலமைக்குள்ளானார்.இக் காலகட்டம் போர் சூழ்நிலை என்ற வகையில் அபிவிருத்தி பணிகளைமேற்கொள்ள முடியாதிருந்த வேளையிலும் உள்ள வளங்களை பாதுகாத்தாலே போதுமென்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.1992 இல் மாணவர் தொகை 700 ஆக காணப்பட்ட நிலையில் காலம் செல்லச் செல்ல மாணவர் தொகை 1000 க்கு மேற்பட்டதாக வளர்ச்சியடைந்தது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில் மாணவர் தொகை அதிகரிப்பால் வகுப்பறைப் பற்றாக்குறை,வளப்பற்றாக்குறை எனப் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.செல்வி.தி.பெரியதம்பி அவர்கள் கல்விப்பணிப்பாளராக இருந்த போது அவர் தனது முயற்சியால் அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளைப் பெற்றுப் பாடசாலைக்கு வழங்கினார்.இக்கல்லூரியில் அமைக்கப்பட்டு கூரையிடப்படாது இருந்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கும் 1997 இல் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டமையால் பெற்றோரின் உதவியுடன் கூரையிட்டு கூரைத்தகடு பொருத்தப்பட்டது.திரு.தம்பு.கந்தையா அதிபர் பதவி ஏற்ற பின்பு இக்கல்லூரியின் இரண்டாவது பரிசளிப்பு விழா 1997 இல் வெகு விமர்சையாக நிகழ்த்தப்பட்டது.
1997 ஆம் ஆண்டு கல்லூரிக்கு மேற்குப் புறக்காணி திருமதி.யோகரத்தினம் விவேகவதியிடமிருந்து 14 பரப்பு கொள்வனவு செய்யப்பட்டது திரு.தம்பு.கந்தையா அதிபர் காலத்திலே ஆகும்.இதற்குரிய நிதியை பெற்றோர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,கொடிகாமம் வர்த்தகர்கள்,தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம்,கொடிகாமம் தெங்கு பனம் பொருள் சங்கம் ஆகியோர் வழங்கியுதவினர்.1998 ஆம் ஆண்டு பொது நிதியாக கிடைத்த ரூ13 1/2 இலட்சம் ரூபாவில் 120*20 அளவுள்ள வகுப்பறைக் கட்டிடம் (மக்கள் மண்டபம்2) திறந்த வெளி அரங்கு,சிற்றுண்டிச்சாலை போன்றவை நிர்மாணிக்கப்பட்டன.
[[படிமம்:இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர் அணிநடை.jpg|200px|thumb|இடது|இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர் அணிநடை]]
அதிபர் திரு.தம்பு.கந்தையா காலத்தில் 1999 ஆம் ஆண்டு மாகாணக் கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் செயற்பாட்டு அறை,விவசாய உபகரண அறை,விவசாய நாற்று உற்பத்திக்கான மண்டபம் என்பன அமைக்கப்பட்டன.இதே ஆண்டில் கொடிகாமம் வர்த்தகர்களால் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு நீர் விநியோகத்திற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.
[[படிமம்:2002 இல்ல மெய்வல்லுனர் போட்டியில் தி.மகேஸ்வரன் பிரதமவிருந்தினர்.jpg|200px|thumb|வலது|2002 இல்ல மெய்வல்லுனர் போட்டியில் தி.மகேஸ்வரன் பிரதமவிருந்தினர்]]
வரி 133 ⟶ 127:
=== புலம்பெயர் காலங்களும் ஆவணக்காப்பும் ===
தென்மராட்சியில் உள்ள பாடசாலைகள் போர்ச்சூழல்கள் ஏற்படும் போது புலம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்தமை வரலாற்றுப் பதிவுகளாகும்.கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஒரு கேந்திர மையத்தில் இருப்பதால் அடிக்கடி பல்வேறு வகையான இடையூறுகளையும் எதிர்கொண்டு வந்தது.இராணுவ நடவடிக்கைகளின் போது பல தடவைகள் இராணுவ முகாமாக,காவலரன்களாக இது விளங்கியிருக்கிறது.
|