'''மீனாட்சிசுந்தரம் பிள்ளை''' (ஏப்ரல் 6, 1815 - சனவரிபிப்ரவரி 21, 1876; [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் [[வேதநாயகம் பிள்ளை]]யுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.