சாளுவன்குப்பம் புலிக்குடைவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tiger Cave.jpg|thumb|300px|சாளுவன்குப்பம் புலிக்குடைவரையின் ஒரு தோற்றம்]]
 
'''சாளுவன்குப்பம் புலிக்குடைவரை''' என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்துக்கு]] வடக்கே [[சென்னை]] நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே [[சாளுவன்குப்பம்]] என்னும் ஊரில் அமைந்துள்ளது.<ref>காசிநாதன், தமிழ்நடன., நாட்டில்மாமல்லபுரம், காணப்படும்மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000, பக். 32.</ref>
 
== பயன்பாடு ==
தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது [[மன்னன்]] இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகில் உள்ள கல்வெட்டொன்றில் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் "திருவெழுச்சில்" என்னும் சொல் காணப்படுவதால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.<ref>இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 66.</ref>
 
கடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சாளுவன்குப்பம்_புலிக்குடைவரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது