வில்லியம் கோட்டை, இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Fortwilliamplan2.jpg with File:1844_Map_of_Fort_William_and_Esplanade.jpg (by CommonsDelinker because: Criterion 2).
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''வில்லியம் கோட்டை''' (''Fort William'') [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] முதன்மை கிளையாறான [[ஊக்லி ஆறு|ஊக்லி ஆற்றின்]] கிழக்குக் கரையில், [[கொல்கத்தா|கல்கத்தா]]வில் (தற்போதைய [[கொல்கத்தா]]) கட்டப்பட்டுள்ள ஓர் [[கோட்டை]] ஆகும். இது [[பிரித்தானிய இந்தியாவின்இந்தியா]]வின் [[வங்காள மாகாணத்தின்மாகாணம்| வங்காள மாகாணத்தில்]] துவக்க காலங்களில் கட்டப்பட்டது.

இக்கோட்டைக்கு [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|இங்கிலாந்து, அயர்லாந்தின் மூன்றாம்]] மற்றும் இசுக்காட்லாந்தின் இரண்டாம் வில்லியத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book|title=Calcutta: A Cultural and Literary History|author= Krishna Dutta|year=2003|pages=71|url=http://books.google.co.in/books?id=UKfoHi5412UC&pg=PA71&dq=fort+william+calcutta&hl=en&sa=X&ei=INoHUKDeJ4fXrQfSo8X1Ag&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=fort%20william%20calcutta&f=false}}</ref> கோட்டைக்கு முன்னால் உள்ள [[மைதானம் (கொல்கத்தா)|திடல்]] இக்கோட்டையின் அங்கமாக இருந்தது; இது கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய நகரியப் பூங்காவாக விளங்குகிறது.
 
==வரலாறு==
வில்லியம் கோட்டை பழையது, புதியது என இரண்டுள்ளது; பழையது 1696இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால்]] ஜான் கோல்டுசுபரோவின் கண்காணிப்பில் கட்டப்பட்டது. சர் சார்லசு ஐர் [[ஊக்லி ஆறு|ஊக்லி ஆற்றின்]] கரையில் தென்கிழக்கு கொத்தளத்தையும் சுவர்களையும் கட்டினார். 1700இல் மூன்றாம் வில்லியம் அரசரின் பெயரில் அழைக்கப்பட்டது. அவரை அடுத்து வந்த ஜான் பேர்டு 1701இல் வடகிழக்குக் கொத்தளத்தைக் கட்டினார். 1702இல் கோட்டையின் நடுவே அரசு மாளிகை ('''பேக்டரி''') கட்டது தொடங்கினார். இந்த கட்டமைப்பு 1706இல் முடிவடைந்தது. இந்தத் துவக்கக் கால கட்டிடத்தில் இரண்டு மாடிகள் இருந்தன. உள்காப்பு அறை ''கொல்கத்தாவின் கருந்துளை'' ஆயிற்று. சூன் 20, 1756இல் கோட்டையை கைப்பற்றிய [[வங்காளம்|வங்காள]] நவாப் [[சிராச் உத் தவ்லா]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]] [[போர்க் கைதி|போர்க் கைதிகளை]] இந்த அறையில்தான் அடைத்து வைத்தார். அடைக்கப்பட்ட 146 பேரில் 123 பேர் மூச்சடைத்து இறந்ததாக கூறப்படுகின்றது.<ref>Little JH (1916) ‘The Black Hole - The Question of Holwell's Veracity’ Bengal: Past and Present, 12. P136-171.</ref> கோட்டையைக் கைப்பற்றிய கோட்டைக்கு ''அலிநகர்'' எனப் பெயரிட்டார். இதனால் பிரித்தானியர்கள் புதுக் கோட்டையை கட்ட முற்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோட்டை,_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது