தாராபாய் ஷிண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
சாதி என்ற சமூக சமத்துவமற்ற தன்மையை ஷிண்டே குறைகூறினார். அதேபோல் இந்து சமுதாயத்தில் சாதிக்கு பிரதான எதிர்ப்பாளராக இருந்த மற்ற ஆர்வலர்களுடைய ஆணாதிக்க கருத்துக்களை விமர்சித்தார். சுசீ தரு மற்றும் கே. லலிதா இருவரின் கூற்றுப்படி, "[[பக்தி நெறி]] காலத்திற்குப்பிறகு முழுவீச்சாக பெண் உரிமைக்காக எடுத்துரைத்த முதல் வெளியீடு ஸ்திரீபுருஷ துலானா" ஆகும். ஆனால் தாராபாயின் பணி குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அக்கால அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் இந்து [[விதவை]]களின் இன்னல்களைக் குறித்தும், பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எளிதில் அடையாளம் காணக்கூடிய அட்டூழியங்களைக் குறித்தும் அக்கறை கொண்டிருந்தபோது, தாராபாய் ஷிண்டே, வெளிப்படையாக தனிமையொருவராக, தந்தைவழி சமுதாய அமைப்பினால் பெண்களுக்கு நேரும் துன்பங்களையும் பகுத்தாய்வு செய்யக் குரல்கொடுத்தவராவார். எல்லா இடங்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதுகிறார்".
1881 ஆம் ஆண்டு புனேயில் இருந்து வெளியான ”புனே வைபவ்” இதழில், இளம் பிராமண (உயர் ஜாதி) விதவையான சூரத்திலுள்ள விஜயலட்சுமிக்கு எதிரான ஒரு குற்றவியல் வழக்கு குறித்து வெளியான கட்டுரைக்கு எதிராக ”ஸ்திரீபுருஷ துலானா” வெளியிடப்பட்டது. விதவையான விஜயலட்சுமி, திருமண பிணைப்புக்குப் புறம்பாகப் பிறந்த தனது குழந்தையை சமூக அவதூறுக்கும் கொடுமைக்கும் பயந்து கொன்றதால் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் அவரது மேல்முறையீட்டால் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.<ref name="fe"/><ref>{{cite news|url=http://www.tribuneindia.com/2002/20020224/spectrum/book1.htm|title=On the other side of society|last=Roy|first=Anupama|date=24 February 2002|work=The Tribune}}</ref><ref name=":0">{{Cite book|title=Makers of Modern India|last=Guha|first=Ramachandra|publisher=The Belknap Press of Harvard University Press|year=2011|isbn=|location=|pages=119}}</ref> மறுமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட உயர் ஜாதி விதவைகளுடன் பணிபுரிந்த நிலையில், உறவினர்களால் கர்ப்பம் தரிக்கநேரிடும் துயர நிகழ்வுகள் குறித்து அறிந்திருந்தார். "நல்ல பெண்களுக்கும்" "பாலியல் தொழிலாளிகளுக்கும்" இடைப்பட்ட கயிற்றின்மேல் நடக்கும் துன்நிலையில் அந்த விதவைகள் இருந்ததை இந்தக் கட்டுரை பகுத்தாய்வு செய்தது. இது 1882 ஆம் ஆண்டில், புனேயில் உள்ள ஸ்ரீ சிவாஜி அச்சகத்தில் ஒன்பது அணா செலவில் 500 பிரதிகள் அச்சிடப்பட்டது.<ref>{{cite news|url=http://www.thehindubusinessline.com/2000/02/04/stories/18044401.htm|date=4 February 2000|title=Poignant pleas of an Indian widow|last=Devarajan|first=P.|work=Business Line}}</ref>
== மேற்கோள்கள் ==
|