சிக்கிமின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
|||
வரிசை 1:
[[படிமம்:Gururinpochen.jpg|thumb|240x240px| சிக்கிமின்[[ நாம்ச்சி]]யில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான 36 மீட்டர் (120 அடி) துறவியின் சிலையான [[பத்மசம்பவர்]] சிலை.]]
'''சிக்கிமின் வரலாறு''' என்பது, 1642 ஆம் ஆண்டில் தற்போதைய வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பல ஆட்சியாளர்கள் இருந்த போது நிறுவப்பட்ட ஒரு இராச்சியத்தின் காலத்திலிருந்து வருகிறது. அந்த சமயத்தில் இருந்த சிக்கிமானது தனி நாடாக இருந்து வந்தது அதன் அரசர் சோக்யால் அல்லது தர்ம ராஜா என அழைக்கப்பட்டார். இந்த நாடானது 1975 மே 16 வரை மன்னரின் ஆட்சியின் கீழ் சுதந்திர நாடாக இருந்தது. சுதந்திர சிக்கிம் நாட்டின் கடைசி மன்னராக பல்டன் தொண்டூப் நம்கையால் என்பவர் இருந்தார். [[சிக்கிம்|சிக்கிமானது]] பண்டைய [[இந்து]] மற்றும் [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்களிடையே]] தொடர்புகள் கொண்டு இருந்தது, அதைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் பௌத்த இராஜ்யமான சோக்யால் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசானது]] [[திபெத்து|திபெத்தில்]] வணிக வழித்தடங்களை நிறுவ முயன்றது, இது சிக்கிமை பிரித்தானியரின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இது 1947 இல் அது சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. ஆதன்பின் சிக்கிம் சுதந்திரமான நாடாக இருந்து, 1975 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
== பழங்கால வரலாறு ==
வரிசை 18:
=== பிரிட்டிஷ் பேரரசுடன் உறவு ===
அருகில் உள்ள இந்தியாவுக்கு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] வந்தனர். நேபாளத்தின் [[கோர்க்கா நாடு|கோர்கா]] இராச்சியத்தின் பொது எதிரியான பிரித்தானியரிடன் சிக்கிம் கைகோர்தது. இதனால் சிக்கிமை பழிவாங்க நேபாளப் படைகள் சிக்கிம் மீது தாக்குதல் நடத்தியது. இது ஆங்கிலேய-நேபாளப் போருக்கு தூண்டுதலாகி [[பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி]] நேபாளத்தை 1814 இல் தாக்கத் தொடங்கியது. போரின் முடிவில் பிரிட்டிஷ் மற்றும் நேபாளத்திற்கு இடையே ஒப்பந்தமான - சூகாலி உடன்படிக்கையும், சிக்கிம் மற்றும் பிரிட்டிஷ் இந்தியா இடையே - டிலிடியா உடன்படிக்கைகள் கையெழுத்தாயின.
இதற்கிடையில், பிரித்தானியர் [[திபெத்து|திபெத்துடன்]] வர்த்தக உறவுகளைத் தொடங்குவதற்கு ஒரு பாதையைத் தேடிக்கொண்டிருந்தது. சிக்கிம் வழியாக பண்டைய [[பட்டுப் பாதை|பட்டுச் சாலையை]] அடையும் வழிக்கு ஏற்றதாக இருப்பதை பிரித்தானியர் கண்டனர். அச்சூழலில் திபெத்தில் வளர்ந்து வந்த [[உருசியா|உருசிய]] செல்வாக்கை முடக்குவதும் இந்த பாதை இணைப்புகளை நிறுவுவதற்கான இன்னொரு காரணமாக இருந்தது. 1825 இல் சிக்கிமில் தொடங்கிய உள்நாட்டுக் குழப்பத்தையடுத்து சிக்கிமைக்கு பாதுகாப்பளிக்கும் வாய்ப்பு பிரிட்டனுக்கு கிடைத்தது. இந்த உறவு மகிழ்ச்சியற்றதானது, சிக்கிமிலிருந்து பிரித்தானிய பகுதிக்கு எளிதாக குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிடுவதால். அதற்கு இழப்பீடாக, பிரிட்டிஷ் அரசாங்கம் சிக்கிம் மன்னருக்கு ரூ. 1841 முதல் 3,000 வரை வழங்கியது, பின்னர் அது ரூ. 12,000 ஆக ஆனது.{{Sfn|Paget|1907}}
வரிசை 31:
1962 ஆம் ஆண்டு, இந்தியாவும், [[சீனா|சீன மக்கள் குடியரசும்]] [[இந்திய சீனப் போர்|போரில்]] ஈடுபட்டன. சிக்கிம் ஒரு சுதந்திரமான நாடாக இருந்தாலும் இந்திய எல்லைப் பாதுகாவலர்கள் மற்றும் சீன வீரர்களுக்கு இடையில்[[நாதூ லா கணவாய்| நாதூ லா கணவாயில்]] மோதல் நிகழ்ந்தது.
பழைய மன்னர் டாஷி நாம்கால் 1963 இல் [[புற்று நோய்|புற்று நோயால்]] பாதிக்கப்பட்டு இறந்தார். பரம்பரையின் கடைசி மன்னரான பால்தன் தொண்டூப் நம்க்யால், 1965 இல் அரியணை ஏறினார். சிக்கிமின் சுதந்திந்திரத்தை மதித்து அதை பாதுகாத்த இந்திய பிரதமர் நேரு 1964 இல் மறைந்தார். அதன்பிறகு சிக்கிம் மன்னரின் அரியணை ஆட்டம் கண்டது. 1966 இல் இந்தியப் பிரதமரான [[இந்திரா காந்தி]], சுதந்திர சிக்கிம் நாடு அல்லது அதன் முடியாட்சியை ஏற்றுக் கொள்வதில் பொறுத்துக்கொள்ள இயலாதவராக இருந்தார்.
வரிசை 41:
மன்னர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காசி (பிரதம மந்திரி) லென்பெப் டோரிஜி ஆகியோருக்கு இடையே பணிப்போர் துவங்கி அது சட்டமன்றத்தின் கூட்டத்தை தடுக்கும் முயற்சியை ஏற்படுத்தியது. அமைச்சரவையால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அமைச்சரவை முடியாட்சி தொடர்வதை ஒருமனதாக எதிர்த்தது.
சிக்கிமின் பிரதமர் டோரிஜி [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்திற்கு]] மாநில பிரதிநிதித்துவம் வேண்டி முறையிட்டார். அப்போது இந்திய இராணுவம் தலையிட்டு சோக்யாலின் படைகளை முறியடித்துத் தலைநகர் கேங்டாக்கை தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து 1975 ஏப்ரல் 14 அன்று சிக்கிமில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,
இவ்வாறு சோழயலின் முடியாட்சி அகற்றப்பட்டு முடிவடைந்தது.1982 ஆம் ஆண்டு, பால்தன் தொண்டப்பு அமெரிக்காவில் புற்றுநோயால் இறந்தார்.
|