கவைமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]][[பகுப்பு:பெயர் தெரியாச் சங்கப் புலவர்கள்]]
கவைமகன்
 
"கவைமகன் நஞ்சு உண்டாங்கு " என்ற தொடரில், இரட்டையரில் ஒருவன் நஞ்சுண்டவழி இரண்டாவது குழந்தைக்கும் அந்நஞ்சு பாதிப்பை உண்டாக்கும் என்று தாய் வருந்துவதுபோல என்பதே அதன் பொருள்.
கவைத்தல் என்ற சொல்லுக்குக் கிளைத்தல் என்று பொருள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பற்றிய செய்தியைக் கொண்ட சொல்லாட்சியே கவைமகன். இதற்கு முனைவர் வி. நாகராசன் தமது உரையில்,
 
"ஓர் உடம்பில் தலையாய்க் கவைத்த மகவு, ஒருவாயால் நஞ்சு உண்டவழி, அந்நஞ்சு, உடல் முழுவதும் பரவுதல் குறித்துத் தாய் அஞ்சுவது போல எனவும் இவ்வுவமை விளக்கப் படும். இருகொம்புகள் ஒட்டிய மரத்தைக் கவைமரம் எனவும் மானின் கொம்புகளிங் கிளைத்த பகுதியைக் கவைக்கொம்பு எனவும் கூறும் வழக்கம் உள்ளது. ஆண் இரட்டை, பெண் இரட்டை, ஆண்பெண் இரட்டை, ஓருடலில் இருதலையுடன் ஒட்டிப் பிறக்கும் இரட்டை, ஓருடலில் ஒட்டிப் பிறக்கும் இரட்டை எனப் பல்வேறு இரட்டைப் பிறப்புகள் உண்டு "
 
என்று கவைமகனுக்கு விளக்கம் தருகிறார். இப்பாடலின் செய்தி சொல்லும் இரட்டையர் இவர்களில் யாரெனக் கேட்பின் இருதலையுடன் ஒட்டிப் பிறக்கும் இரட்டையையே குறிக்கிறது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில் ஒரு மகன் நஞ்சு உண்டவழி அது இருவருக்கும் உடலியல் ரீதியில் பரவுதல் என்பது இவ்விரட்டையரிலே சாத்தியம் ஆகும் என்பதறிக.
 
இக்காலத்தில் மட்டுமல்லாமல் மரபணுக் கோளாற்றின் காரணமாகப் பிறக்கும் இவ்வகை இரட்டையர்கள் அக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை இப்பானல் பதிவு செய்துள்ளது.
 
 
சான்று
 
சங்க இலக்கியம், குறுந்தொகை, NCBH வெளியீடு பக் 774 -775.
"https://ta.wikipedia.org/wiki/கவைமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது