தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல் |
No edit summary |
||
வரிசை 22:
=== தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் ===
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் [[கூலி]]களாகக் குடியமர்த்தப்பட்டனர்.
=== ஆப்பிரிக்காவில் தமிழர் ===
{{Main|ஆபிரிக்காவில் தமிழர்}}
[[ஆபிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் [[தென்னாபிரிக்கத் தமிழர்|தென்னாப்பிரிக்கா]], [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்]], [[ரீயூனியன்]] ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டனர்.
=== ஐரோப்பாவில் தமிழர் ===
{{Main|ஐரோப்பியத் தமிழர்}}
இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.
=== ஓசியானியாவில் தமிழர் ===
{{Main|ஓசியானியாவில் தமிழர்}}
[[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[பிஜி]] ஆகிய [[ஓசானியா|ஓசானிய]] நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிஜித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் [[கரும்பு]]த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.
=== வட அமெரிக்காவில் தமிழர் ===
{{Main|வட அமெரிக்காவில் தமிழர்}}
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த [[கறுப்பு யூலை]] இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர்.
== சமூக அமைப்பு ==
{{Main|தமிழர் சமூக அமைப்பு}}
தமிழர் சமூக அமைப்பு [[சாதி]]ய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன.
== மொழியும் இலக்கியமும் ==
வரிசை 53:
[[படிமம்:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|அகத்தியர், முதலாவது [[தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்]] தலைவர், தென்மதுரை, [[பாண்டியர்]] அரசு.]]
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான [[தமிழ்|தமிழை]]த் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமற்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாகச் செம்மொழி என ஏற்கப்பட்டது.
=== சங்க இலக்கியம் ===
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் [[தொல்காப்பியம்]].
=== சங்கம் மருவிய கால இலக்கியம் ===
கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], [[பெளத்தம்|பெளத்த]] தமிழ்க் காப்பியங்களான [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], [[குண்டலகேசி]] ஆகியவையும், [[சைனம்|சைன]] தமிழ் காப்பியங்களான [[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]], மற்றும்
=== பக்தி கால இலக்கியம் ===
கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வலுப்பெற்றதது.
=== இடைக் கால இலக்கியம் ===
கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர்.
=== தற்கால இலக்கியம் ===
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் [[சுப்பிரமணிய பாரதியார்]] கருதப்படுகிறார். இக்காலத்தில் [[புதுக்கவிதை]] பிறந்தது. [[உரைநடை]] வீச்சு பெற்றது. [[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]] ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் [[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|தமிழ்க் கலைக்களஞ்சியம்]] பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தினர்]] தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த [[அம்பை]], [[மாலதி மைத்ரி]], [[குட்டி ரேவதி]], [[சுகிர்தராணி (கவிஞர்)|சுகிர்தராணி]], [[உமாமகேஸ்வரி]], [[இளம்பிறை]], [[சல்மா]], [[வெண்ணிலா]], [[ரிஷி]], [[மாலதி (சதாரா)]], [[வைகைச்செல்வி]], [[தாமரை (கவிஞர்)|தாமரை]] உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழின்]] அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் [[தமிங்கிலம்]] தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
வரிசை 91:
[[படிமம்:Mahabalipuram Caves detailing.JPG|thumb|right|250px|[[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]]]]
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
=== ஓவியக்கலை ===
வரிசை 98:
ஓவியம் ஒரு [[கவின் கலை]]. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் [[தமிழர் ஓவியம்]] எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.<ref>மாத்தளை சோமு. (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113</ref> இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்"<ref>[http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm ''தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும்
=== நாடகக்கலை ===
வரிசை 115:
ஆடலைக் [[கூத்து]] என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.<ref>ஆறு. அழகப்பன். (2001). ''தமிழ்ப் பேழை''. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.</ref> தமிழர் மத்தியில் [[கும்மி]] ஆட்டம், [[கோலாட்டம்]], [[பரதநாட்டியம்]] என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. [[ஒயிலாட்டம்]], [[மயிலாட்டம்]], [[கரகாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய [[நடனம்|நடனமா]]கும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப
=== தற்காப்புக் கலைகள் ===
{{Main|தமிழர் தற்காப்புக் கலைகள்}}
நடனம், [[இசை]], [[மொழி]] போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. [[தென்னிந்தியா]]வில் இருந்த [[நாடு]]கள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன.
=== யோகக்கலை ===
வரிசை 127:
=== திரைப்படக்கலை ===
{{Main|தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை}}
தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும்.
=== நகைச்சுவை ===
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். [[வில்லுப்பாட்டு]], [[பட்டிமன்றம்]], இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. [[என். எஸ். கிருஷ்ணன்]], [[சந்திரபாபு]], [[கே. ஏ. தங்கவேலு]], [[நாகேஷ்]] ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். [[வடிவழகன்]], [[திண்டுக்கல் ஐ. லியோனி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வடிவேலு]], [[சந்தானம்]] ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். [[கலக்கப்போவது யாரு]], [[அசத்தப் போவது யாரு?]] போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட [[மேடைச் சிரிப்புரை]] பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
=== பேச்சுக்கலை ===
வரிசை 138:
{{Main|தமிழர் நாட்டுப்புறவியல்}}
{| border="1" cellpadding="4" cellspacing="0" style="float:right; width:350px; margin:0 0 1em 1em; background:#f9f9f9; border:1px #aaa solid; border-collapse:collapse;"
|'''[[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரி]]
நீ போருக்கு போனடத்தை<br />
போராடி மாண்டாய் ஐயா<br />
வரிசை 152:
தலைவெடித்துப் போறனையா<br />
|}
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது.
== சித்தரியல் ==
{{Main|சித்தர்கள்|சித்த மருத்துவம்}}
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவைச் [[சித்தர்கள்]] வைத்திருந்தார்கள்.
== சமயம் ==
வரிசை 163:
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|200px|[[ஐயனார்]]]]
தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள்.
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வரிசை 176:
[[நாயன்மார்]]கள் மற்றும் [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களின்]] [[தமிழ்ப் பக்தி இயக்கம்|பக்தி இயக்கம்]], வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், [[அய்யாவழி]] ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று [[திருக்குறள்|திருக்குறளைப்]] பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, [[இறைமறுப்பு]] (நாத்திகம்), [[அறியாமைக் கொள்கை]] (''Agnosticism''), [[உலகாயதக் கொள்கை]], [[இயற்கை நம்பிக்கை]] கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
== மெய்யியல் ==
{{Main|தமிழர் மெய்யியல்}}
தமிழர் எத்தகைய [[உலகப் பார்வை]]யுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும்.
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.<ref>திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்
== வாழ்வியல் ==
=== உணவு ===
{{Main|தமிழர் சமையல்}}
'''தமிழர் சமையல்''', பல நூற்றாண்டுகளாகத் [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[இலங்கை]] மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.
பல்வகை [[மரக்கறி]]கள், சுவையூட்டும் நறுமணம் தரும் [[பலசரக்கு]]கள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. [[சோறு]]ம் [[குழம்பு]]ம் [[கறி]]யும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, [[மரக்கறி]]க் குழம்பு, [[பருப்பு]], [[கீரை]]வகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, [[மீன்]]கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. [[தேங்காய்]], [[மிளகாய்]], [[கறிவேப்பிலை]], [[வெங்காயம்]], [[பூண்டு]], [[இஞ்சி]] உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
வரிசை 207:
{{Main|தமிழர் அரசியல்}}
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் '''தமிழர் அரசியல்''' குறிக்கின்றது.
அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை.
== அமைப்புகள் ==
{{Main|தமிழர் அமைப்புகள்}}
தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் '''தமிழர் அமைப்புகள்''' இயங்குகின்றன. சங்கம் ([[தற்கால தமிழ்ச் சங்கம்]]), [[கோயில்]], இயக்கம் ([[தமிழீழ விடுதலைப் புலிகள்]], [[திராவிடர் கழகம்]], தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் ([[புகலிட ஊர் ஒன்றியங்கள்]]),
=== இயக்கங்கள் ===
வரிசை 238:
== உசாத்துணைகள் ==
=== தமிழ் ===
* [[அ. தட்சிணாமூர்த்தி]],
* [[ஆ. வேலுப்பிள்ளை]]
* [[ஆறு. அழகப்பன்]]
* [[க. த. திருநாவுக்கரசு]]
* [[கா. சிவத்தம்பி]]
* [[செ. கணேசலிங்கன்|கணேசலிங்கன், செ.]]. ([[2001]]). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம்
* [[தனிநாயகம் அடிகள்]]
* [[வி. சிவசாமி]]
* [[பொ. சங்கரப்பிள்ளை]]
* [[ந. சி. கந்தையா]]
* [[தெல்லியூர் எஸ். நடராஜன்]]
* [[ந. சி. கந்தையா]]
* [[மாத்தளை சோமு]]
* [[சி. மெளனகுரு]]
=== ஆங்கிலம் ===
|