தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 22:
 
=== தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் ===
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் [[கூலி]]களாகக் குடியமர்த்தப்பட்டனர். [[மலேசியா]] ([[கடாரம்]]), [[சிங்கப்பூர்]], [[பர்மா]] (அருமணதேயம்), [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]] (ஜாவா (சாவகம்), சுமத்ரா), [[கம்போடியா]] ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்துக்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10%க்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
 
=== ஆப்பிரிக்காவில் தமிழர் ===
{{Main|ஆபிரிக்காவில் தமிழர்}}
 
[[ஆபிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் [[தென்னாபிரிக்கத் தமிழர்|தென்னாப்பிரிக்கா]], [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்]], [[ரீயூனியன்]] ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் [[நைஜீரியா]], [[கென்யா]], [[சிம்பாப்வே]] போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.
 
=== ஐரோப்பாவில் தமிழர் ===
{{Main|ஐரோப்பியத் தமிழர்}}
 
இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக [[ஐரோப்பா]]வுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். [[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[இத்தாலி]], [[சுவிற்சர்லாந்து]], [[நோர்டிக் நாடுகள்]], ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400,000–500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
 
=== ஓசியானியாவில் தமிழர் ===
{{Main|ஓசியானியாவில் தமிழர்}}
 
[[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[பிஜி]] ஆகிய [[ஓசானியா|ஓசானிய]] நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிஜித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் [[கரும்பு]]த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.
 
=== வட அமெரிக்காவில் தமிழர் ===
{{Main|வட அமெரிக்காவில் தமிழர்}}
 
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த [[கறுப்பு யூலை]] இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர்.
 
== சமூக அமைப்பு ==
{{Main|தமிழர் சமூக அமைப்பு}}
 
தமிழர் சமூக அமைப்பு [[சாதி]]ய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் [[இறைமறுப்பு]] கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
 
== மொழியும் இலக்கியமும் ==
வரிசை 53:
 
[[படிமம்:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|அகத்தியர், முதலாவது [[தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்]] தலைவர், தென்மதுரை, [[பாண்டியர்]] அரசு.]]
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான [[தமிழ்|தமிழை]]த் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமற்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாகச் செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ், அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.
 
=== சங்க இலக்கியம் ===
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் [[தொல்காப்பியம்]]. இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி. மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் [[சங்க இலக்கியம்]] எனப்படுகிறது. பழந்தமிழரின் [[அகம்|அகப்பொருள்]] மற்றும் [[புறப்பொருள்]] பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் [[செடி]]கள், [[பறவை]]கள், [[விலங்கு]]கள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் [[திருக்குறள்]], இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. [[திருவள்ளுவர் ஆண்டு]] முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.
 
=== சங்கம் மருவிய கால இலக்கியம் ===
கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], [[பெளத்தம்|பெளத்த]] தமிழ்க் காப்பியங்களான [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], [[குண்டலகேசி]] ஆகியவையும், [[சைனம்|சைன]] தமிழ் காப்பியங்களான [[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]], மற்றும் [[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறுகாப்பியங்களும்]] தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான [[நீலகேசி]] தமிழில் எழுந்த முதல் [[தர்க்கம்|தர்க்க]] நூலாகக் கருதப்படுகிறது.
 
=== பக்தி கால இலக்கியம் ===
கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வலுப்பெற்றதது. [[சைவ சமயம்|சைவமும்]] [[வைணவம்|வைணவமும்]] ஆதரவு பெற்றன. சைவ [[நாயன்மார்]]கள் பல ஆயிரம் [[தேவாரம்|தேவாரங்களைப்]] பாடினர். வைணவ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்]] பாடப்பெற்றன. இக்காலத்தில் [[திருமந்திரம்]] [[சிவஞானபோதம்]] உட்பட பதினான்கு [[சைவ சித்தாந்தம்|சைவ சிந்தாந்த]] நூற்களும் இயற்றப்பட்டன. [[கலிங்கத்துப்பரணி]], [[கம்ப இராமாயணம்]] ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. கி.பி 850-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1250-ஆம் ஆண்டு வரை [[சோழர்|சோழப் பேரரசு]] சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=== இடைக் கால இலக்கியம் ===
கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, [[சதுரகராதி]] என்ற பெயரில், தமிழர்களால் [[வீரமாமுனிவர்]] என அறியப்படுகின்ற, [[இத்தாலி]] நாட்டைச் சேர்ந்தவரான [[வீரமாமுனிவர்]] என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் கி.பி 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான [[நிகண்டு]]கள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.
 
=== தற்கால இலக்கியம் ===
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. [[உ. வே. சாமிநாதையர்]], [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], [[ஆறுமுக நாவலர்]] உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட [[சமற்கிருதம்|சமற்கிருத]] சொற்களையும் [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] நடையையும் தடுக்க [[தனித் தமிழ் இயக்கம்]] தொடங்கப்பட்டது. [[தேவநேயப் பாவாணர்]], [[மறைமலை அடிகள்]], [[பாரதிதாசன்]], [[பெருஞ்சித்திரனார்]] ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
 
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் [[சுப்பிரமணிய பாரதியார்]] கருதப்படுகிறார். இக்காலத்தில் [[புதுக்கவிதை]] பிறந்தது. [[உரைநடை]] வீச்சு பெற்றது. [[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]] ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் [[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|தமிழ்க் கலைக்களஞ்சியம்]] பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தினர்]] தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த [[அம்பை]], [[மாலதி மைத்ரி]], [[குட்டி ரேவதி]], [[சுகிர்தராணி (கவிஞர்)|சுகிர்தராணி]], [[உமாமகேஸ்வரி]], [[இளம்பிறை]], [[சல்மா]], [[வெண்ணிலா]], [[ரிஷி]], [[மாலதி (சதாரா)]], [[வைகைச்செல்வி]], [[தாமரை (கவிஞர்)|தாமரை]] உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழின்]] அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் [[தமிங்கிலம்]] தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
வரிசை 91:
 
[[படிமம்:Mahabalipuram Caves detailing.JPG|thumb|right|250px|[[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]]]]
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் [[மண்]], [[மரம்]], [[தந்தம்]], [[கல்]] ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்குக் கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
 
=== ஓவியக்கலை ===
வரிசை 98:
ஓவியம் ஒரு [[கவின் கலை]]. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் [[தமிழர் ஓவியம்]] எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.
 
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.<ref>மாத்தளை சோமு. (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113</ref> இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்"<ref>[http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm ''தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்''! - வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்]</ref> . தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. [[வரைகதை]], [[தமிழ் வரைகலை|வரைகலை]], [[தமிழ் இயங்குபடம்|இயங்குபடங்கள்]] என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.
 
=== நாடகக்கலை ===
வரிசை 115:
ஆடலைக் [[கூத்து]] என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.<ref>ஆறு. அழகப்பன். (2001). ''தமிழ்ப் பேழை''. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.</ref> தமிழர் மத்தியில் [[கும்மி]] ஆட்டம், [[கோலாட்டம்]], [[பரதநாட்டியம்]] என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. [[ஒயிலாட்டம்]], [[மயிலாட்டம்]], [[கரகாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
 
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய [[நடனம்|நடனமா]]கும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர – [[இராகம்|ராகம்]], த - [[தாளம் (இசை)|தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
=== தற்காப்புக் கலைகள் ===
{{Main|தமிழர் தற்காப்புக் கலைகள்}}
 
நடனம், [[இசை]], [[மொழி]] போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. [[தென்னிந்தியா]]வில் இருந்த [[நாடு]]கள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டுப் போர் [[சாதி]]களின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. [[சிலம்பம்]], [[வர்மக்கலை]], [[குத்துவரிசை]], [[அடிதடி]], [[மல்லாடல்]] ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.
 
=== யோகக்கலை ===
வரிசை 127:
=== திரைப்படக்கலை ===
{{Main|தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை}}
தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[எம். ஜி. ஆர்]], [[ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்|கமல்காசன்]], [[கே. பி. சுந்தராம்பாள்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]] ஆகிய நடிகர்களும் [[கே. பாலச்சந்தர்]], [[மணிரத்னம்]], [[பாரதிராஜா]] ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் [[இளையராசா]], [[ஏ.ஆர்.ரகுமான்]] ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன"<ref>இன்குலாப். (2004). ''ஆனால்''. தஞ்சாவூர்: அகரம்.</ref> போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
 
=== நகைச்சுவை ===
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். [[வில்லுப்பாட்டு]], [[பட்டிமன்றம்]], இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. [[என். எஸ். கிருஷ்ணன்]], [[சந்திரபாபு]], [[கே. ஏ. தங்கவேலு]], [[நாகேஷ்]] ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். [[வடிவழகன்]], [[திண்டுக்கல் ஐ. லியோனி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வடிவேலு]], [[சந்தானம்]] ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். [[கலக்கப்போவது யாரு]], [[அசத்தப் போவது யாரு?]] போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட [[மேடைச் சிரிப்புரை]] பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. [[ஈரோடு மகேஸ்]], [[மதுரை முத்து (நகைச்சுவையாளர்)|மதுரை முத்து]] ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
 
=== பேச்சுக்கலை ===
வரிசை 138:
{{Main|தமிழர் நாட்டுப்புறவியல்}}
{| border="1" cellpadding="4" cellspacing="0" style="float:right; width:350px; margin:0 0 1em 1em; background:#f9f9f9; border:1px #aaa solid; border-collapse:collapse;"
|'''[[ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரி]] - மகனைப் பலிகொடுத்த தாய்''' <ref>அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. ''இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்''. கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 – 52</ref><br /><br />
நீ போருக்கு போனடத்தை<br />
போராடி மாண்டாய் ஐயா<br />
வரிசை 152:
தலைவெடித்துப் போறனையா<br />
|}
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.<ref>கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.</ref> பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 – தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய [[கானா பாடல்கள்]], ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.
 
== சித்தரியல் ==
{{Main|சித்தர்கள்|சித்த மருத்துவம்}}
 
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவைச் [[சித்தர்கள்]] வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள்.
 
== சமயம் ==
வரிசை 163:
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|200px|[[ஐயனார்]]]]
 
தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் [[உலகாயுதம்|உலகாயுத]] போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். தமிழர்கள் ஐந்து நிலங்களுக்கும் உரிய தெய்வங்களாக மாயோன், சேயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியோரை வணங்கி வந்துள்ளனர்.<ref>மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வரிசை 176:
[[நாயன்மார்]]கள் மற்றும் [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களின்]] [[தமிழ்ப் பக்தி இயக்கம்|பக்தி இயக்கம்]], வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், [[அய்யாவழி]] ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
 
இன்று [[திருக்குறள்|திருக்குறளைப்]] பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, [[இறைமறுப்பு]] (நாத்திகம்), [[அறியாமைக் கொள்கை]] (''Agnosticism''), [[உலகாயதக் கொள்கை]], [[இயற்கை நம்பிக்கை]] கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
 
== மெய்யியல் ==
{{Main|தமிழர் மெய்யியல்}}
 
தமிழர் எத்தகைய [[உலகப் பார்வை]]யுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர்.
 
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.<ref>திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் - [[கீற்று (இணையத்தளம்)]] நேர்காணல் - [http://www.keetru.com/literature/interview/as_pannerselvam.php]</ref>
 
== வாழ்வியல் ==
=== உணவு ===
{{Main|தமிழர் சமையல்}}
'''தமிழர் சமையல்''', பல நூற்றாண்டுகளாகத் [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[இலங்கை]] மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க [[தமிழர் விருந்தோம்பல்|விருந்தோம்ப]] தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
 
பல்வகை [[மரக்கறி]]கள், சுவையூட்டும் நறுமணம் தரும் [[பலசரக்கு]]கள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. [[சோறு]]ம் [[குழம்பு]]ம் [[கறி]]யும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, [[மரக்கறி]]க் குழம்பு, [[பருப்பு]], [[கீரை]]வகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, [[மீன்]]கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. [[தேங்காய்]], [[மிளகாய்]], [[கறிவேப்பிலை]], [[வெங்காயம்]], [[பூண்டு]], [[இஞ்சி]] உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
வரிசை 207:
{{Main|தமிழர் அரசியல்}}
 
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் '''தமிழர் அரசியல்''' குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
 
அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. [[உலகத்தமிழர்|உலகத் தமிழர்களுக்கென]] ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது [[தமிழ்நாடு|தமிழக]] முதல்வர் [[மு. கருணாநிதி]] கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.<ref>''Protect Tamils in Malaysia, Karunanidhi urges PM''. AOL Indo Asian News Service. November 27, 2007.[http://www.aol.in/news/story/2007112709089012000005/index.html]</ref> ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் [[தென்னாபிரிக்கத் தமிழர்]] நடாத்திய [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்களும்]] உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.<ref>''South African Indians oppose Indian Arms to Sri Lanka''. [[தமிழ்நெற்]] Friday, 21 March 2008. [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25044]</ref>
 
== அமைப்புகள் ==
{{Main|தமிழர் அமைப்புகள்}}
 
தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் '''தமிழர் அமைப்புகள்''' இயங்குகின்றன. சங்கம் ([[தற்கால தமிழ்ச் சங்கம்]]), [[கோயில்]], இயக்கம் ([[தமிழீழ விடுதலைப் புலிகள்]], [[திராவிடர் கழகம்]], தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் ([[புகலிட ஊர் ஒன்றியங்கள்]]), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும்.
 
=== இயக்கங்கள் ===
வரிசை 238:
== உசாத்துணைகள் ==
=== தமிழ் ===
* [[அ. தட்சிணாமூர்த்தி]], ([[1994]]). ''தமிழர் நாகரிகமும் பண்பாடும்'', சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.
* [[ஆ. வேலுப்பிள்ளை]]., (1985). ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.
* [[ஆறு. அழகப்பன்]]., (2001). ''தமிழ்ப் பேழை''. சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
* [[க. த. திருநாவுக்கரசு]]., (1987). ''தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு''. சென்னை: [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]].
* [[கா. சிவத்தம்பி]]., (1989). ''தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்'' [http://www.noolaham.net/project/02/192/192.htm]
* [[செ. கணேசலிங்கன்|கணேசலிங்கன், செ.]]. ([[2001]]). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம்
* [[தனிநாயகம் அடிகள்]]., (1980). ''[[தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்]]''. கொழும்பு: தந்தை செல்வா அறங்காவற்குழு. [http://www.noolaham.net/project/03/220/220.htm]
* [[வி. சிவசாமி]]., (1973). ''திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும்''. [http://noolaham.net/project/01/48/48.htm]
* [[பொ. சங்கரப்பிள்ளை]]., (1991). ''நாம் தமிழர்''. கொழும்பு: [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்]]. [http://noolaham.net/project/04/364/364.htm]
* [[ந. சி. கந்தையா]]., (). ''சிந்துவெளித் தமிழர்''. [http://www.noolaham.net/project/03/246/246.pdf]
* [[தெல்லியூர் எஸ். நடராஜன்]]., (1947). ''தமிழன் மாட்சி''. இலங்கை: இளைஞன் பிரசுராலயம். [http://www.noolaham.net/project/02/194/194.htm]
* [[ந. சி. கந்தையா]]., (). ''உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு''. [http://www.noolaham.net/project/03/245/245.pdf]
* [[மாத்தளை சோமு]]., (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம்.
* [[சி. மெளனகுரு]]., (2005). ''தமிழர் வரலாறும் பண்பாடும்''. இலங்கை: குமரன் புத்தக இல்லம். [http://noolaham.net/project/04/355/355.htm]
 
=== ஆங்கிலம் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது