எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →விருதுகள் |
சிNo edit summary |
||
வரிசை 5:
==சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்கள்==
பாய்ஸ் கம்பெனிகள் ஆங்கில அரசாங்க கெடுபிடிகளுக்குப் பயப்படாமல் [[இந்தியா|இந்தியாவின்]] சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்களை நிகழ்த்தி மக்களை விடுதலைப் போராட்டத்துக்கு ஆவேசப்படுத்தின. [[வெ. சாமிநாத சர்மா]] எழுதிய [[பாணபுரத்து வீரன்]] என்ற ஆங்கிலத் தழுவல் நாவல், விடுதலை எழுச்சியைப் பூடகமாகத் தூண்டும் விதமாக இருந்தது. பாரதியார் பாடல்களையும் சேர்த்து நாடகமாக உரையாடல்களை எழுதியவர்
==தூக்குக் கயிறு==
தூக்குக் கயிறு நாடகத்தில் சகஸ்ரநாமம், வாலீசன் என்ற பாத்திரத்தில் நடித்தார். "சுதந்திரத்துக்காகப் பாடுபடுவது குற்றமென்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டுதான் இருப்பேன்..." என்று ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்தவுடன் அரச உத்தரவின் பேரில் அவன் தூக்கிலிடப்படுவான். இந்த நாடக அரங்கேற்றத்துக்குச் சில வாரங்கள்முன் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அரசன் தூக்கிலிட உத்தரவிட்டதும், மக்கள் “வாழ்க சுகதேவ் வாழ்க பகத்சிங் “ என்று முழங்குவார்கள்.
1945 வரை
==சேவா ஸ்டேஜ் நாடகக் குழு==
அவருடைய மொத்த அனுபவமும் [[1946| 1946 க்குப்]] பின் ஒரு நல்ல நாடகக் குழுவை ஏற்று நடத்துவதற்கான திறமையையும் துணிவையும்
"கலைவாணர்" [[என். எஸ். கிருஷ்ணன்]] லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை [[என். எஸ். கிருஷ்ணன்|என். எஸ். கே.]] நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். [[1950|1950க்குப்]] பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் [[ஆர். முத்துராமன்]], [[தேவிகா]], [[எஸ்.என். லட்சுமி]] முதலியவர்களைக் குறிப்பிடலாம்.
வரிசை 22:
# [[குலதெய்வம் (திரைப்படம்)|குலதெய்வம்]]
# [[ஆனந்த ஜோதி]]
# [[நல்ல தம்பி]] (1949)
# [[போலீஸ்காரன் மகள்]]
# [[படித்தால் மட்டும் போதுமா]]
வரிசை 48:
* [[சங்கீத கலாசிகாமணி விருது]], 1980, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி<ref>[http://www.theindianfineartssociety.com/oldevents.html AWARDEES OF SANGEETHA KALASIKHAMANI]</ref>
==மறைவு==
சகஸ்ரநாமம் தனது 74வது வயதில் காலமானார்.
|