ஜராசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 7:
ஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது:
 
[[பிருகத்ரதன்]] என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு [[இளவரசி]]களை மணந்து இல்லறம் நடத்திவந்தான்நடத்திவந்த இவன் புகழ் பெற்ற அரசன். எல்லா வசதிகளும் பெற்று வழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் [[முனிவர்|முனிவரை]] அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு இருந்த குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, [[மாம்பழம்]] ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய [[மனைவி]]யிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் பாதிப் பிள்ளைகள் இறந்து பிறந்தன. அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையிட்டான்.
 
மனிதர்களைத் தின்னும் [[இராட்சசி]]யான ''ஜரா'' என்பவள், இவற்றைக் கண்டெடுத்து எடுத்துச் செல்லவதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக் குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய [[குழந்தை]]யே என்று அறிந்த அரசன் அதற்கு, ''ஜரா'' என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி ''ஜராசந்தன்'' என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜராசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது