மூவேந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2401:4900:2305:A45C:F03D:166:767D:39Aஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
 
==சேரர்==
பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த [[சேர நாடு|சேர நாட்டை]](அகமுடையார்) ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி கிமு 300-200 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் [[வில்]]லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் [[கரூர்|கரூரையும்]], [[வஞ்சி]]யையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். கரூர் நாகம்பள்ளி ஸ்ரீ மகாபலேச்சுவர் ஆலயத்தில் காணப்பெறும் கல்வெட்டுகள் யாவும் வஞ்சிவேள், இஞ்சிவேள் போன்ற பட்டங்களுடைய வெள்ளாள அந்துவன் என குறிக்கப்பெறுகின்றன. அந்துவன் எனும் குலப்பெயர் சேரர்களிடத்தும் காணப்பட்டது. மேலும் இந்த ஆலயம் சேரர் காலத்தில் தோன்றியமையும் இக்கோவில் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் இக்குலத்தாரே மிகுந்து காணப்படுவதாலும் இந்த வெள்ளாள அந்துவனே சேரர்கள் வம்சத்தினரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சேர அரசர்கள் [[தொண்டி]]யையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.கொள்ளம், கொடுங்கள்ளூர் மற்றும் திரிசூர் போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரோமானிய, கிரேக்க, அரேபிய நாணயங்கள் மூலம் சேரர்கள் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த வணிகம் பற்றி அறிகிறோம்.
 
==சோழர்==
சோழர்(கள்ளர்) குலம் வளம் பொருந்திய [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், கரிகால் சோழன், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். சோழ மன்னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் கரிகால சோழன், காவிரி ஆற்று நீர்ப் பெருக்கு திறம்பட பயன்படுத்தி பாசன வசதிகளை பெருக்கி பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகை செய்த பெருமைக்குரியவர் ஆவார். காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் உச்சத்தை எட்டிய பாசன நீர் மேலாண்மைக்கு கரிகாலச்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது. பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்து கரிகாலன் போரிட்டார். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனித சின்னங்களும் காணப்படுகின்றன. இவர்களுடைய எல்லை வடக்கே [[ஒரிசா]] வரையிலும் கிழக்கில் [[ஜாவா]], [[சுமத்ரா]], [[மலேசியா]] வரையும், தெற்கே [[மாலைத்தீவு]]கள் வரையிலும் விரிந்து இருந்தது.
 
சோழர்களின் கொடி [[புலி]]க்கொடி. அவர்கள் சூடும் மலர் [[ஆத்தி]]. தலைநகர் [[உறையூர்]]. துறைமுகங்கள் [[காவிரிப்பூம்பட்டினம்]] மற்றும் [[பூம்புகார்]].
 
==பாண்டியர்==
பாண்டியர்கள்(மறவர்) குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன.பாண்டியர்கள்[[திருநெல்வேலி]], மற்றும் தற்போதைய [[கேரளம்|கேரளத்தின்]] தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களை போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பழைய யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள்.பாண்டியர்கள் [[சந்திர வம்சம்|சந்திர வம்சத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும்,[[வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[மீன்கொடி|மீன்கொடியினை]] உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டுக்கள்]], [[சாசனங்கள்]] மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.
 
== சங்க காலக் குறுநில மன்னர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூவேந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது