வீரராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
{{சோழர் வரலாறு}}
 
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திர சோழனைத்]] தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் '''வீரராஜேந்திர சோழன்''' (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.
 
இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திர சோழனைத்]] தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் '''வீரராஜேந்திர சோழன்''' (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.
 
இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
 
==போர்கள்==
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான [[மேலைச் சாளுக்கியர்|சாளுக்கியருடன்]] பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. [[கீழைச் சாளுக்கியர்|கீழைச் சாளுக்கிய]]ப் பகுதியான [[வேங்கி]] மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், [[பாண்டியர்|பாண்டி]] நாட்டிலும், [[இலங்கை|ஈழத்திலும்]] சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.
 
===ஆரம்பகாலப் போர்கள்===
இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான [[முதலாம் சோமேசுவரன்]] சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.
 
====சாளுக்கியப் போர்கள்====
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய [[கல்வெட்டு]]க்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே [[கூடல் சங்கமம்]] என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.
 
அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.
 
தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
 
கூடல் சங்கமத்தில் இருந்து [[கீழைச் சாளுக்கியர்]]களின் தலைநகரான [[வெங்கி]]க்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே [[சோழர்]] ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் [[கிருஷ்ணா நதி]]க் கரையில் முறியடித்தான். வெங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வெங்கியில் மன்னனாக்கினான். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.
 
====இலங்கைப் போர்====
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த [[முதலாம் விஜயபாகு|விஜயபாகு]] என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டியன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.
 
====கடாரப் படையெடுப்பு====
வீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் [[கடாரம்|கடாரத்தின்]] மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி கி.பி 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 
==சாளுக்கியருடனான தொடர்பு==
வரி 48 ⟶ 47:
==இறப்பு==
 
வீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் [[அதிராஜேந்திர சோழன்|அதிராஜேந்திரன்]] என்னும் பெயருடன் அரசனானான்.
 
== உசாத்துணைகள் ==
வரி 55 ⟶ 54:
* Nilakanta Sastri, K.A. (1955). ''A History of South India'', OUP, New Delhi (Reprinted 2002).{{ஆ}}
* South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/ {{ஆ}}
{{வார்ப்புரு:சோழர்}}
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீரராஜேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது