பம்பாய் கலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இந்திய விடுதலைப் போராட்டம் using HotCat |
|||
வரிசை 3:
'''பம்பாய் கலகம்''' (''Bombay Mutiny'') அல்லது '''வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம்''' (''Royal Indian Navy Mutiny'') என்பது [[பிரித்தானிய இந்தியா]]வின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. [[மும்பை]] கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.
[[இரண்டாம் உலகப் போர்]] முடிந்த பின்னர் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போசின்]] [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தில்]] பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய [[போர்க்கைதி]]கள் சிலர் மீது பிரித்தானிய அரசு [[ஐஎன்ஏ வழக்குகள்
பெப்ரவரி 18ம் தேதி இந்திய மாலுமிகளின் கலகம் வெளிப்படையாக வெடித்தது. மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த சில கப்பல்களும் கடற்படைத் தளங்களும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. [[கராச்சி]], [[விசாகப்பட்டினம்]], [[கொச்சி]] போன்ற கடற்படைத் தளங்களுக்கும் விரைவில் கலகம் பரவியது. கலகக்காரர்கள் கலகத்தை ஒருங்கிணைக்க ஒரு நடுவண் வேலைநிறுத்தக் குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மும்பை நகரத்தில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தமும் கடைபிடிக்கப்பட்டது. பிரித்தானிய கடற்படைக் கொடி கப்பல்களிலிருந்து கடற்படைத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டு
[[இந்திய தேசிய காங்கிரசு]], [[அகில இந்திய முசுலிம் லீக்]], [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி|இந்தியப் பொதுவுடமைக் கட்சியின்]] செங்கொடி, ஆகிய மூன்று கொடிகளையும் ஒற்றுமைக்குச் சின்னமாக ஏற்றிவிட்டனர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=42211 | title=பொன்மலை தியாகிகள் : தொழிலாளர் இயக்கத்தின் மகுடம் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=5 செப்டம்பர் 2013 | accessdate=5 செப்டம்பர் 2014 | author=ஆர்.இளங்கோவன் | pages=3}}</ref>. பிரித்தானிய அதிகாரிகள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.
பெப்ரவரி 19ம் தேதி பிரித்தானிய ஆட்சியாளர்கள் கலகத்தை அடக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். கலகக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்களும் தளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டன. கலகத்தால் சட்ட ஒழுங்கும், சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து போகுமெனக் கருதிய [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[முஸ்லிம் லீக்]] கட்சிகள் கலகத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க மறுத்து விட்டது. [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] போன்ற ஒரு சில கட்சிகளே வெளிப்படையாக கலகக்காரர்களுக்கு ஆதரவளித்தன. பெப்ரவரி 20ம் தேதி கலகம் முற்றிலுமாக அடக்கப்பட்டு கலகக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பம்பாய் கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும் காலனிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1942ம் ஆண்டு நடைபெற்ற [[வெள்ளையனே வெளியேறு]] கிளர்ச்சியை இந்தியப் படைகளின் துணை கொண்டே பிரித்தானிய அரசு அடக்கியிருந்தது. இந்தியப் படைகளிடையே விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு பெருகி விட்டதால், இனியொரு முறை பெரும் கிளர்ச்சி ஏற்பட்டால் முன்போல செயல்படுவார்கள் என நம்ப முடியாது என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இவ்வாறு இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்க இக்கலகம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
|