பள்ளிப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
எழுத்துப் பிழை
வரிசை 1:
'''பள்ளிப்படை''' என்பது வீரத்துடன் [[போர்]]புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது [[நடுகல்]] என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் [[படைத் தளபதி]]கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள். கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் காணப்பட்ட கோயில்கள் இறந்த வீரர்களுக்குரிய [[சமாதி]]க் கோயில்களாகவே இருந்ததாகத் தெரிகிறது. இதற்குப் பின்னரே இவைகள் பள்ளிப்படைகள் என அழைக்கப்பட்டன.
 
இறந்துபோன முன்னோர்களையும், வீரர்களையும் வணங்கும் வழக்கத்தில் இருந்தே [[கோயில்]]கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகின்றது. இவ்வளர்ச்சியில் பள்லிப்படைக்பள்ளிப்படைக் கோயில்கள் ஒரு கட்டமாகும். ஆண்களுக்குப் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டது போலவே அரசகுலப் பெண்கள் சிலருக்கும் பள்ளிப்படைகள் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளரது கூற்று ஆகும். ஆண்களது பள்ளிப்படைகளில் [[சிவலிங்கம்|லிங்கம்]] வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பிற்காலத்தில் இவை [[சிவன்]] கோயில்களாக மாறிவிட்டன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பள்ளிப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது