சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *{{கலைக்களஞ்சியம்-வெளி|02|087}}
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 6:
 
==வரலாறு ==
ஏறக்குறைய 14 ஆம் நூற்றான்டின் முற்பகுதி வரையில் [[மதுரை]]யில் ஆட்சி செலுத்தி வந்த [[பான்டியர்]] பெருமை அந்நூற்றாண்டின் பிறபகுதியில் சிதைவுற்றது. டெல்லி அரசரின் தளபதி [[ மாலிக்காப்பூர்|மாலிக்காப்பூரின்]] படையெடுப்பாலும், விஜய நகர வேந்தரின் படைத்தளபதி [[ கம்பண உடையார்|கம்பணவுடையாரின்]] போர்களினாலும் பாண்டியர் குடி சிதறுண்டது. அக்குடியினரில் ஒரு கிளையினர் [[திருநெல்வேலி]]ப் பகுதியைத் தம் வசப்படுத்தித் [[தென்காசி]]யில் இருந்துகொண்டு அதனை ஆண்டு வந்தனர்.
 
இக்கிளையினர் மதுரையில் ஆண்டு வந்த நாயக்க மன்னர்களுக்கு அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. இவர்களுள் ஒருவரே அதிவீரராம பான்டியர். இவர் '' கோ ஐடிலவர்மன் திரிபுவன சக்கராத்தி கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப் பெருமாள் குலசேகரதேவர் நந்தனாரான அழகம் பெருமாள் அதிவீர ராமரான ஸ்ரீவல்லபதேவர்'' என்று கல்வெட்டொன்றில் அழைக்கபப்டுகிறார். ஸ்ரீவல்லபன் என்னும் பெயர் சீவலன் என்றும் சிதைந்து வழங்கப்படுகிறது. இவரைப் பற்றி சீவலமாறன் கதை என்ற ஒரு நூலும் உண்டு. இவருக்கு இராமன், வீரமாறன் என்ற வேறு பெயர்களும் உண்டு.
வரிசை 13:
வீரவெண்பாமாலை சூடிய தந்தையின் மைந்தரான இவ்வரசர், புலவரிப் போற்றியும், தாமே கவிபாடும் திறமை பெற்றும் விளங்கினார். சேறை ஆசு கவிராயர், திருவண்னாமலைப் புலவர் சிதம்பரநாதர், புதுக்கோட்டை நைடதம் இராமகிருஷ்ணர் முதலியோர் இவரால் ஆதரிக்கப்பெற்றோர் ஆவர். ஆசு கவிராச சிஙக்ம் என்ற சேறை ஆசுகவிராசதை காளத்திநாதர் கட்டளைத்த்டுறை என்ற நூலைப் பாடும்படி செய்வித்தவர் இவரே என்றும் கூறுவர். இவர்களேயல்லாமல் சிவந்த கவிராசர் என்ற ஒரு புலவரும் இவருடைய அவையை அலங்கரித்துள்ளனர்.
== திருப்பணிகள்==
இவர் சிவ பக்தியிலும் சிறந்திருந்தார். தென்காசிப் பெரிய கோயிலுக்கு மேற்பகுதியில் இவர் தம் தந்தை பெயரால் ஒரு சிவாலயத்தைக் கட்டினார். இதனருகில் ஒரு [[திருமால் ]] கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இதனால் இவருடைய பொது நோக்கு விளங்கும். இவர் 1564 முதல் 1603 வரை அரசக் கட்டிலில் இருந்தார். இவருக்குப் பட்டமெய்தியவர் இவருடை பெரிய தந்தையில் குமாரரான வரதுஙக பாண்டியர் ஆவார்.
== நூல்கள் ==
அதிவீரராம பாண்டியர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் [[நைடதம்]], [[காசிக் காண்டம்]], [[கூர்மபுராணம்]], கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெணபாவந்தாதி, கருவைக்கலித்துறையந்தாதி, [[வெற்றி வேற்கை]] என்பனவாகும். இவற்றையன்றிக் [[கொக்கோகம்]] என்ற காம நூலையும் [[இலிங்க புராணம்]] என்ற நூலையும் இவர் பாடினார் என்பர்.
வரிசை 27:
 
=== நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை===
இது 136 அடிகளைக் கொண்ட ஒரு நீதி நூலாகும். 9 பகுதிகளை உடையதாய், உலகத்தார் அறிய வேண்டும் என இன்றியமையா நீதிகளை, மிக எறிய சொற்களில், படிப்பவ்ர் மனதிலே ஊன்றுமாறு செறிவுடன் யாக்கப்பட்டுள்ளது.
 
=== பிற நூல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சடையவர்மன்_அதிவீரராம_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது