வாய் திறந்து பேசுபவர் மட்டுமன்றி வாய் திறவா புட்களுக்கும் குரல் கொடுப்பவன் நான்... எண்ணற்ற இலக்கிய வகைகள் இருப்பினும் கவிதைப்பாலை பருகிக் கொண்டிருப்பவன்... என்னால் முடியாத ஒன்றை என் எண்ணத்தால் அடைந்திருப்பதுதான் அதிசயம்!.. உச்சி வானைப் பிளந்து பார்த்திருக்கிறேன் கடவுள் என்ற ஒன்றெல்லாம் இல்லை, இன்னும் மேலே பார்த்திருக்கிறேன் சொர்க்கம் நரகம் எதுவுமில்லை.... பூமியில். பார்த்திருக்கிறேன் அந்த கடவுள், சொர்க்கம், நரகம் என முப்பரிமாண கோணங்களில் வாழ்விழந்த மங்கைகள்... போதைக்காய் அன்றாட உழைப்பில் ஈடுபடும் ஆடவர் இத்தகைய ஆய்வில் ஈடுபட்ட கவிஞன் நான் எழுதுகிறேன். நல்லதை ஏற்க எவரும் வருவதில்லை. தீமைக்கு முந்திவந்து குரல் கொடுப்போர் ஏராளம்... மக்கள், சமூகம், அரசியல், என்று பன்முக வாழ்வை உணர்ந்தவன் நான் நான்.