வெ. இராமலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 38:
'''நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை''' ([[அக்டோபர் 19]], [[1888]] - [[ஆகஸ்ட் 24]], [[1972]]) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் [[பால கங்காதர திலகர்]] போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் [[மகாத்மா காந்தி]]யின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் [[அறப் போராட்டம்|அறப் போராட்டத்தால்]] மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
==இராமலிங்கம் பிள்ளை வாழ்க்கை==
==குறிப்பு==
இராமலிங்கனார் பழைய [[சேலம் மாவட்டம்]], தற்போதைய [[நாமக்கல் மாவட்டம்]] [[மோகனூர்|மோகனூரில்]] வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை [[மோகனூர்|மோகனூரில்]] காவல்துரையில் பணிபுரிந்து வந்தார் மற்றும் இவரது தயார் ஒரு பக்கதியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909 இல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பயின்றார். இவர் அரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.[[திருச்சிராப்பள்ளி]] மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வெ._இராமலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது