பூமலை அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கேரளத்தின் திருச்சூர் மாவட்டடதில் உள்ள அணை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Poomala Dam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:25, 24 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பூமலை அணை என்பது நீர்பாசன நோக்கத்துக்காக கட்டபட்ட அணை ஆகும். இந்த அணை இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புழக்கல் தொகுதிக்கு உட்பட்ட முலங்குண்ணாதுகவு பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு அணையும், சுற்றுலா தலமுமாகும். [1] [2]

வரலாறும், வசதிகளும்

1939 ஆம் ஆண்டில் பூமலை பள்ளத்தாக்கில் முன்னதாக ஒரு சிற்றணை கட்டப்பட்டது, 1968 இல் பூமலை நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கபட்டது. மண் மற்றும் கற்களால் கட்டபட்ட இந்த அணையானது கேரள சிறு நீர்ப்பாசனத் துறையால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. பூமலை அணையை ஒரு சுற்றுலா மையம் என்று உத்தியோகபூர்வமான உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணனால் 21 மார்ச் 2010 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 94.50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே மற்றொரு அணையான, பதசகுண்டு உள்ளது, அது தற்போது நீர்ப்பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் படகு சவாரி, குதிரை சவாரி, 600 மீட்டர் நடைபாதை; 300 பேர் அமரத்தக்க ஒரு சமுதாயக் கூடம்; ஒரு சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறை வசதிகள் போன்றவை உள்ளன. [3] [4]

குறிப்புகள்

  1. "Poomala designated as tourist centre". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
  2. "Boy drowns in Poomala dam". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
  3. "Poomala dam to be made tourist centre". Equations. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
  4. "Poomala dam makeover nearing completion". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமலை_அணை&oldid=3038117" இலிருந்து மீள்விக்கப்பட்டது