எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 30:
== முன் வாழ்க்கை ==
தமிழ்நாட்டின் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையைச்]] சேர்ந்தவர் சுப்பையா. ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனி’ யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார். பின்னர், பாலசண்முகானந்தா சபை மற்றும் சக்தி நாடகசபா போன்ற நாடக குழுக்களில் இணைந்து நடித்தார். சக்தி நாடக சபாவில், கவிஞர் [[எஸ். டி. சுந்தரம்]] எழுதிய ’கவியின் கனவு’ நாடகத்தில் மகாகவி ஆனந்தனாக நடித்தார். இது இவருக்கு தமிழ் படங்களில் நுழைய வழி வகுத்தது.
 
== திரைப்பட வாழ்க்கை ==
[[ஏ. வி. எம்|ஏ.வி.எம்]] புரொடசன்சின் முன்னோடியான பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த [[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]] (1946) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்து இவர் [[ஜுபிடர் பிக்ச்சர்ஸ்]] தயாரித்து கோவை அய்யமுத்து மற்றும் டி. ஆர். கோபு இயக்கிய [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சனில்]] (1947) நடித்தார்.<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=305 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> [1] பின்னர், அவர் [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யுவில்]] [[சகுனி]]யாக நடித்தார், இதில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] [[அர்ஜுனன்|அர்ஜுனனின்]] பாத்திரத்தை ஏற்றிருந்தார்.<ref>{{cite news | last= Guy | first= Randor | title= Blast from the Past - Abhimanyu 1948 | date= 2 October 2009 | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | work= [[The Hindu]] | access-date= 2017-05-30 | archive-url= https://archive.today/20170530043249/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | archive-date= 30 May 2017 | url-status= dead | df= dmy-all }}</ref>
 
சுபையாவுக்கு திருப்புமுனையாக [[காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)|காலம் மாறிப்போச்சு]] (1956) படம் அமைந்தது. அதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவரது குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது. இது இவரது எதிர்கால படங்களில் நல்லபாத்திரங்களை பெற்றுத்தர வாய்பாக இருந்தது. தமிழ் திரைப்பட ஆர்வலர்களிடையே இவரது பாத்திரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்படியான பல படங்கள் இருந்தாலும், வரலாற்றுப் படமான [[கப்பலோட்டிய தமிழன்]] (1961) படத்தில் இவர் நடித்த பாத்திரம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் படத்தில் இவர் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாக]] நடித்தார். பாரதியாக நடித்த இவரது பாணியை [[சிவாஜி கணேசன்]] முதல் [[கமல்ஹாசன்]] வரை, எதிர்கால படங்களில் பாரதி வேடத்தில் தோன்றிய, பல கலைஞர்கள் பின்பற்றினர்.
 
சுபையா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன்சில் [[காவல் தெய்வம்]] என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[ஆர். முத்துராமன்]], [[டி. எஸ். பாலையா]], [[எம். என். நம்பியார்]], [[நாகேஷ்]], [[வி. கே. ராமசாமி]] போன்ற அக்காலத்திய பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சிறப்புத் தோற்றங்களில் தோன்றினர்.<ref>[http://nadigarthilagam.com/filmographyp13.htm Nadigar Thilagam Filmography]</ref>
 
இந்தப் படத்தில் [[சிவகுமார்]] மற்றும் [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] நாயகன் நாயகியாக நடித்தனர். சிவாஜி கணேசன் தனது பாத்திரத்திற்கான ஊதியத்தை பெற மறுத்துவிட்டார். உணர்ச்சிவசப்பட்ட சுப்பையா "எனது அடுத்த பிறப்பில் நான் ஒரு நாயாக மாறி சிவாஜி கணேசனுக்கு சேவை செய்வேன்" என்றார். அவரது தாழ்மையான ஆளுமை இதுதான்.<ref name=sivakumar>{{Cite book |author=Sivakumar |title=Idhu Raajapaattai Alla |trans-title=This is not Royal Highway |language=Tamil |pages=137–140 |publisher=Alliance Company, Mylapore, Chennai 600004, 13th edition, 2014}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது