தமிழரிடையே ''கோலம்'' என வழங்கப்படும் கலையுடன் உள்ள தொடர்பு காரணமாகவும், முக்கிய வேறுபாடாக நிறம் இருப்பதாலும், இதை ''நிறக்கோலம்'' அல்லது ''வண்ணக்கோலம்'' எனலாம். இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பர். இது ''ரங்ரங்க'', ''ஆவலி'' என்னும் இரு சமசுக்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது. இங்கே ''ரங்'' என்பது ''நிறம்'' என்னும் பொருளையும், ''ஆவலி'' என்பது ''வரிசை'' அல்லது ''கொடி'' என்னும் பொருளையும் தருவன. தமிழ்நாட்டுக் கோலத்தையும் ''ரங்கோலி'' என்பதற்குள் அடக்கும் வழக்கமும் உண்டு. இது சரியானது அல்ல. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். [[இராசத்தான்|இராசத்தானில்]] இதை ''மதானே'' என்பர். வட இந்தியாவின் சில பகுதிகளில் ''சவுக்பூர்ணா'' என்றும், [[வங்காளம்|வங்காளத்தில்]] ''அல்பனா'' என்றும், [[பீகார்|பீகாரில்]] ''அரிப்பனா'' என்றும், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] ''சவுக் பூஜன்'' உத்தராகண்டம்|உத்தராகண்டத்தில்]] ''எய்பபன்'' என்றும் இதற்குப் பெயர்கள் உண்டு<ref>{{cite web |url=http://www.rediff.com/news/2007/nov/06sld4.htm|title=Kolams, chowkpurana, madana, aripana...|author= |date= |work= |publisher=Rediff|accessdate=12 January 2012}}</ref>.