பயனர்:Gowtham Sampath/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 59:
 
* '''நடத்திய இதழ்கள்''': *இவர் '''இந்தியா, விஜயா''' முதலிய இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டார். இவர் '''சுதேசமித்ரன், சக்கரவர்த்திணி, சூரியோதையம், கர்மயோகி''' போன்ற தமிழ் இதழ்களிலும், பாலபாரத யங் இந்தியா என்ற ஆங்கில இதழ்களிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
 
== வரலாறு ==
 
* 1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அப்போது பாரதிக்கு 5 வயது. தாயின் இறப்புக்கு பிறகு பாட்டி '''பாகீரதி அம்மாளிடம்''' கொஞ்சம் நாள் வளர்ந்து வந்தார்.
 
 
* 1893 - இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் '''ஷெல்லியின்''' மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.
 
 
* 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
 
 
* 1898 - 1902 - பாரதியார் தனது அத்தையின் ஆதரவில் காசியில் வாழ்ந்தார். காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேரச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் புதுமுகத் தேர்வில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். வடமொழியோடு இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.
 
 
* 1902-1903 - எட்டையபுரம் மன்னர் அழைப்பிற்கிணங்க எட்டையபுரம் வந்தார். அரசவைக் கவிஞராகப் பணி புரிந்தார். 1903 இல் பணியை விட்டு விலகினார்.
 
 
* 1904 - மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின் அதனை விடுத்து சென்னையில் சுதேசமித்திரன் நாளிதமில் துணையாசிரியராகப் பணி புரிந்தார். மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
 
 
* 1904 - நவம்பர் முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
 
 
* 1905-1906 - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி -யின் நட்பு கிடைத்தது. தாதாபாய் நெளரோஜி தலைமையில் கோல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். விவேகானந்தரின் சிஷியை '''நிவேதிதா தேவியைச்''' சந்தித்து அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அரசியல் குருவாக '''பாலகங்காதர திலகரையும்''' ஏற்றுக் கொண்டார்.
 
 
* 1907 - இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உடன் Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கு திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் போன்றோரைச் சந்தித்தார்.
 
 
* 1908 - ஸ்வதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார். தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் இந்தியா பத்திரிகையின் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். அதனால் ஆங்கிலேயே அரசு பாரதி மீது வாரண்ட் பிறப்பித்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி புதுவை சென்றார். அங்கே குவளைக் கண்ணனின் நட்பு கிடைத்தது.
 
 
* 1909 - பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுதியான ஜன்மபூமி வெளியானது.
 
 
* 1912 - பாரதி கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார். பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.
 
 
* 1918 - கடலூர் அருகே பாரதி கைது செய்யப்பட்டு 34 நாள்கள் கழித்து விடுதலையானார். பின்பு அங்கிருந்து கடையம் புறப்பட்டுச் சென்றார்.
 
 
* 1918-1920 - கடையத்தில் வசித்த பாரதி வறுமையால் மிகவும் துன்பமடைந்தார். அவருக்கு யாவரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை. மீண்டும் சென்னை வந்த சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
 
* 1921 - திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியாரைத் தாக்கியதில் அவர் நோய்வாய்ப்பட்டார். இதே ஆண்டு செப்டம்பர் 12 (11 ஆம் தேதி நள்ளிரவு தாண்டி, 12 ஆம் தேதி) அதிகாலை 1.30 மணியளவில் இறந்தார்.
 
== நினைவகங்கள் ==
 
* 1948 - எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டது.
 
 
* தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.
 
 
* 1960 - பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
 
 
* 1982 - பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
 
 
* 1999 - எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடிய உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.(11.12.1999)
 
== ==
 
* இவரை '''சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன்''' என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
 
 
* பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.
 
 
== படைப்புகள் ==
{{columns-list|colwidth=20em|
# குயில் பாட்டு
# [[கண்ணன் பாட்டு]]
# பாப்பா‌ பாட்டு
#[[சுயசரிதை (பாரதியார்)]]
# [[தேசிய கீதங்கள்]]
# [[பாரதி அறுபத்தாறு]]
# [[ஞானப் பாடல்கள்]]
# [[தோத்திரப் பாடல்கள்]]
# [[விடுதலைப் பாடல்கள்]]
# [[விநாயகர் நான்மணிமாலை]]
# [[பாரதியார் பகவத் கீதை (பேருரை)]]
# [[பதஞ்சலியோக சூத்திரம்]]
# [[நவதந்திரக்கதைகள்]]
# [[உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு]]
# [[ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)]]
# சின்னஞ்சிறு கிளியே
# [[ஞான ரதம்]]
# [[பகவத் கீதை]]
# [[சந்திரிகையின் கதை]]
# [[பாஞ்சாலி சபதம்]]
# [[புதிய ஆத்திசூடி]]
# [[பொன் வால் நரி]]
# [[ஆறில் ஒரு பங்கு]]
}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Gowtham_Sampath/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது