அயூப் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
==இளமைக் காலம்==
[[வடமேற்கு எல்லை மாகாணம் (பாகிஸ்தான்)|வடமேற்கு எல்லை மாகாணத்தில்]] உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் ரெகானா என்னும் ஊரில் [[தரீன் இனக்குழு]]வைச் சேர்ந்த மிர் டாட் கான் என்பவரது இரண்டாம் [[மனைவி]]க்கு முதல் மகனாக அயூப் கான் பிறந்தார். அயூப் கானின் தந்தை அரச இந்தியப் படைத்துறையின் குதிரைப் படைப் பிரிவொன்றில் பணியாணை பெறாத (non-commissioned) தரத்து அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.<ref> [http://www.jamestown.org/terrorism/news/article.php?articleid=2370188]</ref> அடிப்படைக் கல்வி பெறுவதற்காகத் தனது ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலிருந்த பள்ளி ஒன்றில் சேர்ந்த அயூப் கான், ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் [[கோவேறு கழுதை]]யில் பயணம் செய்து வந்தார். பின்னர், ஹரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்ட இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கினார். 1922 ஆம் ஆண்டில் அலிகார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர் அங்கே தனது கல்வியை முடித்துக் கொள்ளாமல், [[சாண்டர்ஸ்ட் அரச படைத்துறைக் கழகம்|சாண்டர்ஸ்ட் அரச படைத்துறைக் கழகத்தில்]] சேர்ந்தார். அங்கே தனது திறமையைக் காட்டிய அயூப் கானுக்கு, பிரித்தானிய இந்தியப் படையில் அதிகாரியாகப் பதவி கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாப் போர் முனையில் முதலில் கப்டனாகவும் பின்னர் மேஜராகவும் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பாகிஸ்தான் படையில் 10 ஆவது மூத்த அதிகாரியாக இருந்தார். பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்ற இவர் வாசிரிஸ்தானில் இருந்த படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1948 ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் தரத்துடன் கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்றைய [[வங்காளதேசம்]]) அனுப்பப்பட்டார். பாகிஸ்தான் படையின் கிழக்குப் பகுதியின் பொறுப்பு முழுதும் இவரிடம் இருந்தது. 1949 ஆம் ஆண்டில் அஜட்டண்ட் ஜெனரல் என்னும் பதவியுடன் மீண்டும் மேற்குப் பாகிஸ்தானுக்கு வந்தார். சிறிது காலம் துணைத் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
 
===தலைமைத் தளபதி===
[[Image:Ayubnewarmychief.jpg|thumb|180px|left|பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்பவரும் ஜெனரல் அயூப் கான் (1951)]]
1951 ஜனவரி 17ல் பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாக இருந்த [[டக்ளஸ் கிரேசி]] என்பவரின் இடத்துக்கு அயூப்கான் நியமிக்கப்பட்டர். இதன் மூலம் இப்பதவியை ஏற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த [[இஸ்கந்தர் மிர்சா]], அயூப் கானின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. மிர்சா பின்னர் ஆளுனர் நாயகம் (Governor General) ஆகவும், 1956 மார்ச் 23ல் பாகிஸ்தான் குடியரசு ஆன பின்னர் சனாதிபதியாகவும் ஆனார். அயூப் கானின் பதவிக் காலத்தில் மூன்று மாதங்களே எஞ்சியிருந்தபோது, இஸ்கந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். அயூப் கான் இராணுவச் சட்டத் தளபதி ஆக்கப்பட்டார்.<ref>The Pakistan Coup d'etat 1958 by Waynes Ayres Wilcox [http://www.jstor.org/pss/2753785]</ref> ஆனால், அயூப்கான் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி மிர்சாவைப் பதவியிலிருந்து அகற்றினார்.
 
===பாகிஸ்தான் சனாதிபதி (1958-1969)===
வரிசை 43:
 
1962 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாமுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அது அரச மதமாக ஆக்கப்படவில்லை. 80,000 அடிப்படைக் குடிமக்கள் தலைவர்களால் சனாதிபதி தெரிவு செய்யப்பட வழி செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். இம் முறையை அயூப் கான் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[தேர்தல் கல்லூரி]] முறையுடன் ஒப்பிட்டார். அயூப் கானிம் அரசமைப்புச் சட்டத்தில் தேசுய அவை ஒன்றுக்கு இடமளிக்கப் பட்டிருந்தாலும் இதற்கு குறைந்த அளவு அதிகாரமே இருந்தது.
 
==குறிப்புக்கள்==
<References/>
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அயூப்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது