'''இவா அன்னா பௌலா பிரான்''' இறக்கும்போது '''இவா அன்னா பௌலா இட்லர்''' ([[ பெப்ரவரி 6 பிப்ரவரி]], [[1912]]-[[30 ஏப்ரல்]] [[1945]]) ''அடால்ப் இட்லரின் '' மனைவியான இவர் இட்லரை தன்னுடைய 17 வது வயதில் இட்லரின் உதவியாளரகவும், அவர் புகைப்பட ஆர்வத்துக்கு மாடலாகவும் ஊழியம் செய்வதற்கு இட்லரை முனிச்சில் சந்தித்தார். அது முதல் அவரிடம் நெருக்கமானார். இட்லரின் அந்தரங்கத்தில் அதிகம் பங்கு கொண்டவர். இவருடைய அரசியல் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை, இவருடைய மேம்போக்கான செயல்களாகிய ''புகைப்பது'' மற்றும் ''தேவைக்கு அதிகமான அலங்காரம்'', ''ஆடையற்ற நிலையில் சூரியக் குளியல் எடுப்பது'' போன்ற காரணங்களால் சில நேரங்களில் இட்லரின் கண்டிப்புக்கு ஆளானார். ஆரம்ப கால நட்பின் போது இரு முறை தற்கொலை முயற்ச்சி மேற்கொண்டார். [[30 ஏப்ரல்]], [[1945]] ல் பெர்லின் செஞ்சேனையிடம் வீழ்ந்தபோது இட்லருடன் சேர்ந்து சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு ஒருநாள் முன்னதாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர் இறக்கும் பொழுது இவர் கறுவுற்றிருத்தாக வதந்தி உண்டு. அதில் உண்மையில்லை. திருமாணபின் இவரை பிரௌ (பியூர்ரின்மனைவி) அழைக்க ஊழியர்கள் பணிக்கப்பட்டனர். அந்த ஒரு நாள் மட்டும் அழைக்கமுடிந்த்து. இட்லர் மட்டும் அடிக்கடி '''பிராவுலின் பிரான்''' என்று கடைசி நிமிடம் வரை அழைத்து மகிழ்வூட்டினார்.