தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
==வரலாறு==
[[சோழர்]] ஆட்சிக்காலத்தில் [[தஞ்சாவூர்]] ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] நாயக்கர்கள், [[திருச்சி]], மற்றும் [[மதுரை]] நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்">{{cite web | url=http://www.craftclustersofindia.in/site/indexl.aspx?mu_id=3&Clid=679 | title=இந்தியர்களின் கைவினைத்தொழில் | publisher=தமிழ்நாடு- மதுரை சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சாவூர், மதுரை நகரங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து
இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது. <ref> ந.இராதா, தஞ்சை ஓவியம், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 </ref>
வரிசை 23:
தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref name="அரவக்கோன்">{{cite web | url=http://tamilnenjamhifs.blogspot.in/2009/05/blog-post_16.html | title=தஞ்சாவூர் ஓவியங்கள் | work=அரவக்கோன் | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த வண்ணங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாகக் கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பின்னணி வண்ணத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண் கடவுள்களுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு வண்ணம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கைச்சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு வண்ணங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றப்படுகிறது.
தஞ்சாவூர் ஓவியங்களின் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.
|