பல்யானைச் செல்கெழு குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பல்யானைச் செல்கெழுகுட்டுவன்''', சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] [[சோழர்|சோழ]] மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். [[சங்க காலம்|சங்க கால]] இலக்கியமான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்<ref>புலியூர்க் கேசிகன், 2005 பக். 65</ref>, பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான்<ref></ref>, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன<ref></ref>.
==குறிப்புகள்==
|