சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அத்துவஞ்சேரல் இரும்பொறை''' [[சேர நாடு|சேர நாட்டின்]] ஒரு பகுதியாக இருந்த [[பொறையநாடு|பொறையநாட்டின்]] ஆட்சியாளர்கள் வழி வந்தவன். [[இரும்பொறை]] என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே<ref>டான் பொஸ்கோ</ref>. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
 
அந்துவஞ்சேரலாதன், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, [[கொங்கு நாடு]], பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரலாதன், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான்<ref>டான் பொஸ்கோ</ref>. அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.
 
இவனது இரண்டாவது மகனான செல்வக்கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து<ref>செல்வம், வே. தி, 2002. பக். 91</ref>. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, நார்முடிச் சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது<ref>டான் பொஸ்கோ</ref>.
 
இவனது இரண்டாவது மகனான செல்வக்கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான்.
 
அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டான்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது