'''ப்ரதோஷம்''' (not '''பிரதோசம்! Please change everywhere!)''' (Pradosha) என்பது [[சைவ சமயம்|சைவ சமயத்தில்]] [[சிவன்|சிவபெருமானை]] வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு ''பிரதோச வழிபாடு'' எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ''பிரதோச விரதம்'' எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் [[புராணம்|புராணக்]] கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் [[ஆலகாலம்]] சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.