'''தேசவழமைச் சட்டம்''' என்பது [[ஒல்லாந்தர்]] ஆட்சிக்காலத்துக்கு முன்னர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வழங்கிய சட்ட வழக்கங்களை (customs) பிரதானமாகஅடிப்படையாக வைத்து யாழ்ப்பாண ஆதிக்கமுதலிமாரின் வகுப்பினரால் தொகுத்துஉதவியுடன் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தருக்குஒல்லாந்தரால்]]ச்[[தொகுக்கப்பட்ட ஒரு சட்டம்|சட்டமாக]]க் கொடுக்கப்பட்டது ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் பாரம்பரியம்வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது [[1707]] ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் [[1869]] இலும் பின் [[1911]] இலும் கடைசியாக [[1948]] இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது. [[இலங்கை]]யில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமூம் ஒன்று. ஏனையவை இரண்டும், [[கண்டிச் சட்டம்]], [[இசுலாமியச் சட்டம் (இலங்கை)|இசுலாமியச் சட்டம்]] ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது [[கண்டி]] வாழ் [[பௌத்தம்|பெளத்தர்]]களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் [[இசுலாம்|இசுலாமியர்]]களுக்கும், தேசவழமைச் சட்டமானது [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது.