கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்...
 
வரிசை 10:
=சிறப்பியல்புகள்=
 
* 1960ஆம் ஆண்டுகளில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர்களில் ஒருவராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திகழ்ந்தார்.
 
* குடும்பப் படங்கள் என்று கூறப்படுனவற்றைக் குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தமைக்காக இவர் சிறப்பாக அறியப்பட்டார்.
 
* புரட்சிகரமான கருத்துக்களை அளிப்பதிலும் இவர் பின் தங்கியதில்லை. எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி நடித்த சாரதா இதற்கு ஒரு உதாரணம். விபத்தினால் ஆண்மையை இழந்து விட்ட கதாநாயகன் தனது காதல் மனைவிக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டி அவளை மறுமணத்திற்கு வற்புறுத்துவதான கதை, இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்தாக அமைந்து பரபரப்பாகப் பேசப்பட்டது.
 
* கதாபாத்திரங்களின் குண இயல்புகளைச் சித்தரிப்பதில் மிகவும் வல்லவராக விளங்கினார். சித்தி திரைப்படத்தில் பத்மினி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் சாவித்திரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 
* நாடகபாணி வசனத் திரைப்படங்களை இயக்குவதாக ஒரு விமர்சனம் இருப்பினும், இவரது படங்களை வசனங்களே ஆக்கிரமித்துக் கொண்டன என்பது உண்மைதான் என்றபோதும், அந்த வசனங்களும் இயல்பானவையாக, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன. அடுக்கு மொழி, அலங்கார வசனங்கள் அன்றி, அன்றாட மக்களின் வாழ்விலிருந்தே தமது வசனங்களை இவர் தேர்ந்தெடுத்தார்.
 
* டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் ரஷ்ய நாவலைத் தழுவி பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த திரைப்படம் என்னதான் முடிவு என்பதாகும். வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும், இன்றளவும் ஒரு சோதனை முயற்சியாக இது பாராட்டப்பெறுகிறது.
 
=சில புகழ் பெற்ற திரைப்படங்கள்=
 
* பணமா பாசமா
* உயிரா மானமா
* குலமா குணமா
* சித்தி
* கை கொடுத்த தெய்வம்
* தெய்வத்தின் தெய்வம்
* நத்தையில் முத்து
* ஆதிபராசக்தி
* குறத்தி மகன்
* என்னதான் முடிவு
* சின்னஞ்சிறு உலகம்
* செல்வம்
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது