பாரிசின் விடுவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 22:
 
'''பாரிசின் விடுவிப்பு''' (''Liberation of Paris'') [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நடந்த ஒரு சண்டை. [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியான இதில் [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசை]] [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது '''பாரிசு சண்டை''' என்றும் அறியப்படுகிறது.
 
1940ம் ஆண்டு பிரான்சை நாசி ஜெர்மனி தாக்கிக் [[பிரான்சு சண்டை|கைபற்றியது]]. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. ஜூன் 6, 1944ம் தேதி நேச நாட்டுப் படைகள் பிரான்சு மீது கடல் வழியாகப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுத்தன]]. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப் இன்னர் [[செய்ன் ஆறு|செய்ன் ஆற்றுக்கு]] மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, பிரான்சின் பல பகுதிகள் நேச நாட்டு வசமாகின. ஆகஸ்ட் மாதத்தில் [[ஃபலேசு இடைப்பகுதி]] சண்டைக்குப் பின்னர், பாரிசைக் கைப்பற்றுவது சாத்தியமானது.
 
ஆனால் பாரிசைக் கைப்பற்றுவது குறித்து நேச நாட்டு தளபதிகளுள் கருத்து வேறுபாடு நிலவியது. நேச நாட்டு முதன்மை தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்|ஐசனாவர்]] பாரிசை உடனடியாகக் கைப்பற்றுவதற்கு போதுமான இராணுவ காரணங்கள் இலலையெனக் கருதினார். தளவாடப் பற்றாக்குறையால் பாதிக்கபப்ட்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு பாரிசு மீதான தாக்குதல் ஒரு வீண் சுமை என்று கருதினார். பாரிசு விடுவிக்கப்பட்டால், அதன் குடிமக்களின் உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு நேச நாட்டுப் படைகளுடையதாகும், இதனால் போர் முயற்சி பெரிதும் பாதிக்கப்படும் என அவர் கருதினார். மேலும் பாரிசு வீழும் பட்சத்தில், அதனைத் தகர்த்து நாசமாக்க [[இட்லர்]] தனது பாரிசு படைகளின் தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார். இக்காரணங்களால் அமெரிக்கர்களும் பிரிட்டானியர்களும் பாரிசைத் தாக்கத் தயங்கினர். அதனை சுற்றி வளைத்து விட்டு பிற பகுதிகளைத் தாக்க விரும்பினர்.
 
ஆனால் நாடுகடந்த சுதந்திர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் படைகளின் தலைவர் ஜெனரல் [[சார்லஸ் டி கோல்]] இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு பெரும் பரப்புரை வெற்றியினை (propoganda victory) பெறுவதற்காகவும் பாரிசினை உடனுக்குடன் கைப்பற்ற விரும்பினார். பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருள் கம்யூனிஸ்டுகள், கோலிஸ்டுகள் என பல கோஷ்டிகள் இருந்தன. இவற்றுள் யார் பாரிசை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பொருக்குப் பின்னால் ஏற்படப்போகும் பிரெஞ்சு அரசினைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் கிட்டுமென்பதால், பாரிசை விடுவிக்க பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் முனைந்தன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாரிசின்_விடுவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது