இலங்கை தொடருந்து போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==இலங்கை புகையிரதக் கம்பனி==
எனவே இவர்களது உற்பத்தியைக் கொழும்புக்குக் கொண்டுவருவதற்காக ரயில்தொடர்வண்டி சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதற்கென 1845ல் இலங்கை புகையிரதக் கம்பனி Ceylon Railway Company (CRC) என்ற பெயரில் கம்பனியொன்று இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிளிப் என்ஸ்ரொடலர் Philip Anstruther என்பவர் இருந்தார்.
 
==நிலஅளவை==
கம்பனியின் பொறியியலானரான தோமஸ்ட்ரோன் (Thomas Drane) என்பவர் இலங்கைக்கு வந்து நிலஅளவைகளை மேற்கொண்டு கொழும்பிலிருந்து கண்டிவரையில்கண்டி வரையில் தொடர்வண்டிப் பாதையமைப்பதற்கு 850,000 ஸ்டர்லிங் பவுண் செலவாகும் என மதிப்பீடு செய்தார். இத்தொகை மிக அதிகமானது எனக் கருதப்பட்டதால் 258,000 பவுண் செலவில் கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை (54 கி.மீ) மாத்திரம் ரயில்தொடர்வண்டிப் பாதையை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 
எனினும், கொழும்பிலிருந்து கண்டிவரை 800,000 பவுண் என்ற குறைந்த தொகையில் ரயில்தொடர்வண்டிப் பாதையை அமைப்பதற்கு கம்பனியும் இலங்கை அரசும் 1856ல் உடன்படிக்கை செய்துகொண்டன. இத்தொகையும் அதிகம் எனக் கருதிய கோப்பிச் செய்கையாளர்கள், ரயில் பாதை தொடர்பாக மீளாய்வொன்றைச் செய்யுமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் மனுச் செய்தனர்.
 
==கப்டன் மூர்ஸம் சிபாரிசு ==
இதன் விளைவாக, செலவு குறைந்த மாற்றுப் பாதைகளின் சாத்தியம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் கப்டன் மூர்ஸம் என்பவர் 1857ல் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் ஆய்வின்படி கொழும் - கண்டி ரயில்தொடர்வண்டிப் பாதைக்கான 6 மாற்று வழிகள் சிபாரிசு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுக்கான சராசரிச் செலவு 856,557 பவுண்கள் எனவும் மதிப்பிடப்பட்டது.
 
கருங்கல் குன்றுகளினூடாகச் சுரங்கப் பாதைகள் அமைத்தல் மலை அடிவாரங்களில் பாறைகளை குடைதல், பள்ளத்தாக்குகளுக்கு மேல் செங்குத்தான காப்பரண்களை அமைத்தல், நீர் நிரம்பியுள்ள சேற்று நிலங்களை நிரப்புதல், பாலங்களை நிர்மானித்தல் போன்ற பல்வேறு சிரமமான வேலைகள் நிறைவேற்றப்படவேண்டி இருந்ததால் செலவைக் குறைப்பது சாத்தியமல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே சிபாரிசு செய்யப்பட்ட மாறு வழிகளுள் ஒன்று தெரிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
==1858 ஆகஸ்ட் 3ல் ஆரம்பம்==
கம்பனியின் ஒப்பந்தக்காரரும் பொறியியலாளருமான டப்ளியு. டி. டோனி W.T. Doyne என்பவர் ரயில்தொடர்வண்டிப் பாதைபாதைகள் அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றார். [[1858]] [[ஆகஸ்ட் 3]]ம் திகதி அப்போதைய ஆளுனர் சர். ஹென்றி வோர்ட் கொழும்பில் பிரதான ரயில்தொடர்வண்டி நிலையம் இப்போது அமைந்துள்ள இடத்தில் நிலத்தை வெட்டி நிர்மாண வேலைகளைக் கோலாகலமாக ஆரம்பித்து வைத்தார்.
 
எனினும், உத்தேசிக்கப்பட்ட செலவில் வேலையை முடிக்க முடியாது என்பது விரைவில் நிரூபணமாகியது. களனி நதியின் மீதாகப் பாலம் அமைப்பதும் ரம்புக்கனை முதல் கடுகன்னாவை வரையுள்ள ஏற்றத்தில் தண்டவாளங்களைப் பொருத்துவதும் பெரும் சவால்களாக அமைந்திருந்தன. எனவே மேலதிக நிதி தேவை என டோனி விண்ணப்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தொடருந்து_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது